முன்கள பணியாளர்கள் மூன்றுகோடி பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி

முன்கள பணியாளர்கள் மூன்றுகோடி பேருக்கு, முதற்கட்டத்தில் செலுத்தப்படும் தடுப்பூசிக்கு ஆகும்செலவை, மத்திய அரசே ஏற்கும்,” என, பிரதமர் நரேந்திரமோடி நேற்று தெரிவித்தார்.

கொரோனா வைரசுக்காக உருவாக்கப்பட்டுள்ள, ‘சீரம் இன்ஸ்டிட்யூட்’ நிறுவனத்தின், ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிக்கும், ‘பாரத்பயோடெக்’ நிறுவனத்தின், ‘கோவாக்சின்’ தடுப்பூசிக்கும், அவசர காலத்தில் பயன்படுத்த, மத்தியஅரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது.இந்த தடுப்பூசிகளை, மக்களுக்கு செலுத்தும்பணிகள், வரும், 16ம் தேதி, நாடுமுழுதும் துவங்க உள்ளன.

இந்நிலையில், கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சூழல்குறித்தும், தடுப்பூசி வினியோக நடைமுறை குறித்தும், அனைத்துமாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

நம் நாட்டில், கொரோனா வைரசுக்கான இரண்டு தடுப்பூசிகளுக்கு, இது வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு தடுப்பூசிமருந்துகள், இறுதிகட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டுள்ள, கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள், உலகில் உருவாக்கபட்டுள்ள இதர தடுப்பூசிகளைக் காட்டிலும், விலை குறைவானவை.அதிக செயல்திறன் உடைய தடுப்பூசிகள், நாட்டுமக்களுக்கு கிடைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், நம் ஆராய்ச்சியாளர்களும், மருத்துவ நிபுணர்களும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இவற்றை தயாரித்துள்ளனர்.மக்களுக்கு தடுப்பூசிசெலுத்தும், உலகின் மிகப்பெரிய திட்டம், நம் நாட்டில், வரும், 16ம் தேதி துவங்க உள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்று சேவையாற்றி வரும், முன்கள பணியாளர்கள் மூன்று கோடிபேருக்கு, முதற்கட்டத்தில், தடுப்பூசி செலுத்தப்படும். இந்த மூன்று கோடி பேருக்கும், தடுப்பூசிக்கு ஆகும்செலவை, மாநில அரசு ஏற்கத் தேவையில்லை. அந்த செலவை, மத்திய அரசே ஏற்கும். சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களை தவிர, வேறுயாரும், இந்த தடுப்பூசியை முதற்கட்டத்தில் எடுத்துக்கொள்ள கூடாது. மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகள், தங்கள் வாய்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும். முதற்கட்டத்தில் முந்தவேண்டாம்.உலகில் உள்ள, 50க்கும் மேற்பட்ட நாடுகளில், 2.5 கோடி பேருக்கு மட்டுமே, இதுவரை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நம்நாட்டில், அடுத்த சில மாதங்களில், 30 கோடி பேருக்கு, தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

மஹாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த, ‘சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா’ நிறுவனத்திடம் இருந்து, கொரோனா வைரசுக்கான, ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிமருந்துகளை கொள்முதல் செய்வதற்கு, மத்திய அரசு, நேற்று, ‘ஆர்டர்’ செய்தது. அதன்படி, 1.1 கோடி தடுப்பூசி மருந்தின், ‘டோஸ்’களை வாங்க, ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி மருந்தின் ஒருடோஸ் விலை, 200 ரூபாயாக நிர்ணயித்துள்ள சீரம்நிறுவனம், ஜிஎஸ்டி., வரியாக 10 ரூபாயை சேர்த்து, 210 ரூபாய்க்கு, விற்க உள்ளது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில்,’ ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த, 2016ல் துவக்கிவைத்தார். இந்ததிட்டத்தின் சர்வதேச மாநாடு, வரும், 15, 16ம் தேதிகளில், ‘வீடியோ கான்பரஸ்’ வழியாக நடக்கஉள்ளது.

இந்தமாநாடு பற்றி, ‘டுவிட்டரில்’ பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:இந்த மாநாட்டில், சுயதொழில்துவக்க ஆர்வமுள்ள இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்கவேண்டும். நம், ‘ஸ்டார்ட் அப்’ ‘ஹீரோ’க்கள், பெரும் நகரங்களிலிருந்து மட்டுமல்லாமல், சிறிய நகரங்களில் இருந்தும் உருவாகியுள்ளனர் என்பதில் பெருமிதப் படுகிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...