வன்தாரா வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்

குஜராத்தின் ஜாம்நகரில், ‘வன்தாரா’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள வனவிலங்கு மீட்பு, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள, ‘ரிலையன்ஸ்’ நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு மைய வளாகத்தில், ‘வன்தாரா’ என்ற பெயரில் வனவிலங்கு மீட்பு, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ மற்றும் ‘ரிலையன்ஸ்’ அறக்கட்டளையால், 3,000 ஏக்கர் பரப்பளவில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வனவிலங்கு சரணாலயத்தில், 2,000க்கும் மேற்பட்ட உயிரினங்கள், 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மீட்கப்பட்ட, அழிந்துவரும் மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளான விலங்குகளும் உள்ளன.

இந்த வனவிலங்கு சரணாலயத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் திறந்து வைத்தார். அங்கு விலங்குகளின் மருத்துவ சிகிச்சைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள, எம்.ஆர்.ஐ., சி.டி., ஸ்கேன், தீவிர சிகிச்சைப் பிரிவு வசதிகளை பார்வையிட்டார்.

14 hour(s) ago

மேலும், விலங்குகளுக்கான அனஸ்தீஷியா, இதய சிகிச்சை, சிறுநீரகவியல், பல் மற்றும் எண்டோஸ்கோபி பிரிவுகளை பார்வையிட்டு டாக்டர்களுடன் கலந்துரையாடினார்.

பின், ஆசிய சிங்கம் மற்றும் சிறுத்தைக் குட்டிகளுடன் பிரதமர் விளையாடினார். இந்த சரணாலயத்தில் சமீபத்தில் பிறந்த வெள்ளை சிங்கக்குட்டிக்கு பிரதமர் பாலுாட்டினார்.

வனப்பகுதிக்கு அருகே நெடுஞ்சாலையில் வாகனம் மோதி படுகாயம் அடைந்த சிறுத்தை, வன்தாரா எடுத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அந்த சிறுத்தைக்கு நடந்த அறுவை சிகிச்சையை பிரதமர் நேரடியாக பார்வையிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...