இரண்டுகோடி பெண்களை லட்சாதிபதி ஆக்குவதுதான், என் கனவு

”இரண்டுகோடி பெண்களை லட்சாதிபதி ஆக்குவதுதான், என் கனவு,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் திட்டங்களை அனைத்துமக்களுக்கும் கொண்டு சேர்க்கும்வகையில், ‘விக் ஷித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ என்ற பெயரில், நாடுமுழுதும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

நேற்று நடந்த நிகழ்ச்சியில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில், மத்திய அரசு கொண்டுவந்த நலத்திட்டங்களால், கோடிக் கணக்கான பயனாளிகளின் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இது, தைரியம், திருப்தி மற்றும் கனவுகளின் கதையாக உள்ளது.

மக்களுடன் பழகும்போது அவர்களின் தன்னம்பிக்கையைப் பார்ப்பது, எனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது.

ஒரு கோடிக்கும் அதிகமானபேருக்கு, மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத்திட்டமான, ‘ஆயுஷ்மான்’ அட்டை வழங்கப்பட்டு உள்ளது. 1.25 கோடி பேருக்கு மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில், 70 லட்சத்துக்கும் அதிகமானோர் காசநோய்க்காக பரிசோதனை செய்துள்ளனர்.

இதுவே, முந்தையகால ஆட்சியாக இருந்திருந்தால், அரசு அலுவலகங்களை சுற்றிவந்தே மக்கள் நம்பிக்கையை இழந்திருப்பர்.நான், உங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை போன்றவர். என்னை நீங்கள் எளிதில்அணுகலாம்.

மத்திய பா.ஜ., ஆட்சியில், நாடுமுழுதும், 10 கோடி பெண்கள் சுயஉதவி குழுக்களில் சேர்ந்துள்ளனர்.மேலும், வங்கிகள் வாயிலாக 7.5 லட்சம்கோடி ரூபாய் கடன்களாக வழங்கப்பட்டுள்ளன.

இரண்டுகோடி பெண்களை லட்சாதிபதி ஆக்குவதுதான், என் கனவு. விவசாயிகளுக்கு உதவும் வகையில் லட்சக்கணக்கான சேமிப்பு கிடங்குகளை உருவாக்கும்பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.