அதிமுகதான் தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை தீர்மானிக்கும்

தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரியகட்சியான அதிமுகதான் தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை தீர்மானிக்கும் என பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமிகோயிலில் தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, தங்கள் கூட்டணியில் பெரியகட்சியான அதிமுகதான், முதலமைச்சர் வேட்பாளரை தீர்மானிக்கும் என்றார்.

அத்துடன், ஓபிஎஸ் – இபிஎஸ் தங்களுக்கு ஆதரவுதருவதால் கே.பி.முனுசாமியின் கருத்தை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை எனவும் அவர்கூறினார்.

இந்நிலையில், முதலமைச்சர் வேட்பாளரை அதிமுகவே முடிவு செய்யும் என்ற சி.டி.ரவி கூறியதற்கு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.2021 சட்டமன்ற தேர்தலின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிமுக அறிவித்து, தேர்தல்பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. அத்துடன் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் சட்சிகளுடன்தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும் அக்கட்சியினர் தொடர்ந்து கூறிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...