மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் பதவி முடிவு பிரதமரின் முடிவே இறுதியானது -ஏக்நாத் ஷிண்டே

மஹாராஷ்டிராமாநிலத்தில் முதலமைச்சராகபணியாற்றியதில்திருப்திகரமாகவும், தாம் பொதுவான மனிதர்கள் என்றும் இடைக்கால முதலமைச்சர்ஏக்நாத் ஷண்டே தெரிவித்துள்ளார் . மகாராஷ்டிராவில்மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. எனினும் முதலமைச்சராக யார் பதவி ஏற்பார்கள்என்பதில் குழப்பம் நீடிக்கிறது. தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மீண்டும் முதலமைச்சர்ஆக வேண்டும் என்று அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வலியுறுத்துகின்றனர்.ஆனால், பாஜக தரப்பில் தேவேந்திரபட்நாவிஸைமுதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் தமது இல்லத்தில்செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, “பிரதமர் நரேந்திர மோடியிடம் நேற்று போனில் பேசினேன். நான் ஒரு தடையாக இருக்கமாட்டேன் என்று கூறியுள்ளேன். மகாயுதி அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் என்ற முறையில் நீங்கள் (பிரதமர்) முடிவு எடுங்கள். அதுவே எங்களுக்கு இறுதியான முடிவாகஇருக்கும். கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் மகாயுதிஅரசு மேற்கொண்ட பணிகள் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். எனவே நான் திருப்தியாக உள்ளேன்.

நான் ஒரு பொதுவான மனிதன். எனவே பொதுமான மனிதர்களை சந்திக்கும்போது அங்கு தடை ஏதும் இருக்காது. நான் ஏழைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால், பொதுமக்களின் பாதிப்புகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நான் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் உள்ளேன். நாங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவைப் பெற்றுள்ளோம். எங்கள் திட்டங்களுக்கு ஆதரவு அளித்த பிரதமர், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

இது ஒரு வரலாற்று ரீதியிலான வெற்றியாகும். நாங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்காமல் ஓய்வின்றி உழைத்தோம். எனது இறுதி மூச்சு இருக்கும் வரை மகாராஷ்டிரா மக்களுக்காக உழைப்பேன். இளைஞர்களுக்கு வேலை கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகின்றேன். மகாயுதி கூட்டணி தலைவர்கள் புதுடெல்லியில் சந்தித்துப் பேச உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் இறுதி முடிவு எடுக்கப்படும்,” என்றார். ஏக்நாத் ஷிண்டே இவ்வாறு வெளிப்படையாக கூறியதன் அடிப்படையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேர்வில் சிக்கல் இருக்காது என்று பாஜக மேலிடம் கருதுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...