தமிழ் கலாசாரத்தை சீர்குலைத்தது, தி.மு.க., -காங்கிரஸ் ., கூட்டணி அரசு

”தமிழ் கலாசாரத்தை சீர்குலைத்தது, தி.மு.க., -காங்கிரஸ் ., கூட்டணி அரசு,” என, தமிழக பா.ஜ., மேலிடபொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டி: அனைத்து பகுதிகளிலும், பா.ஜ.,வை வலுப்படுத்த, நடவடிக்கை எடுத்துவருகிறோம். தமிழ் கடவுள்வேறு, ஹிந்து கடவுள் வேறு கிடையாது; எல்லாம் ஒரே கடவுள்தான். நான் கர்நாடகாவில் இருந்து வருகிறேன். முருகக் கடவுளை வழிபடுகிறேன்; அவர் உலகக்கடவுள். கடந்த, 1965ல் ஹிந்தியை திணித்தது யார்;  அப்போது, ஆட்சியில் இருந்தது யார் என, திமுக.,வினரிடம் கேளுங்கள். ஹிந்தி எதிர்ப்புபோராட்டம் காரணமாக, காங்கிரசை, திமுக., தோற்கடித்தது. பின், 2011ல் ஜல்லிக்கட்டை தடைசெய்தது யார்; அப்போது ஆட்சியிலிருந்த, தி.மு.க., – காங்., கூட்டணி அரசு ஜல்லிக்கட்டுக்கு எதிராக, நீதிமன்றத்தில் பிரமாணபத்திரம் தாக்கல்செய்தது.

அவர்கள்தான் தமிழ் கலாசாரத்தை சீர்குலைத்தனர்; பா.ஜ., அல்ல. திருக்குறள், பாரதியார், மாமல்லபுரம், கம்பராமாயணம் குறித்தும், தமிழ்கலாசாரம் குறித்தும், பிரதமர் அதிகம் பேசி வருகிறார். தேசிய கல்வி கொள்கை, 22 மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. யார் எந்தமொழியையும் படிக்கலாம் என்கிறோம். இந்த வசதியை பா.ஜ., மட்டுமே கொடுத்துள்ளது.

தென் மாநிலங்களில், தமிழகம் அதிகநிதியை, திட்டங்களை, மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளது. தமிழக வரலாற்றில், 11 மருத்துவ கல்லுாரிகளை, ஓராண்டில் பெற்றுள்ளது. கர்நாடகாவிற்கு நான்குமருத்துவ கல்லுாரிகள் மட்டுமே வழங்கப்பட்டது. இவ்வாறு, சி.டி.ரவி கூறினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...