தமிழ் கலாசாரத்தை சீர்குலைத்தது, தி.மு.க., -காங்கிரஸ் ., கூட்டணி அரசு

”தமிழ் கலாசாரத்தை சீர்குலைத்தது, தி.மு.க., -காங்கிரஸ் ., கூட்டணி அரசு,” என, தமிழக பா.ஜ., மேலிடபொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டி: அனைத்து பகுதிகளிலும், பா.ஜ.,வை வலுப்படுத்த, நடவடிக்கை எடுத்துவருகிறோம். தமிழ் கடவுள்வேறு, ஹிந்து கடவுள் வேறு கிடையாது; எல்லாம் ஒரே கடவுள்தான். நான் கர்நாடகாவில் இருந்து வருகிறேன். முருகக் கடவுளை வழிபடுகிறேன்; அவர் உலகக்கடவுள். கடந்த, 1965ல் ஹிந்தியை திணித்தது யார்;  அப்போது, ஆட்சியில் இருந்தது யார் என, திமுக.,வினரிடம் கேளுங்கள். ஹிந்தி எதிர்ப்புபோராட்டம் காரணமாக, காங்கிரசை, திமுக., தோற்கடித்தது. பின், 2011ல் ஜல்லிக்கட்டை தடைசெய்தது யார்; அப்போது ஆட்சியிலிருந்த, தி.மு.க., – காங்., கூட்டணி அரசு ஜல்லிக்கட்டுக்கு எதிராக, நீதிமன்றத்தில் பிரமாணபத்திரம் தாக்கல்செய்தது.

அவர்கள்தான் தமிழ் கலாசாரத்தை சீர்குலைத்தனர்; பா.ஜ., அல்ல. திருக்குறள், பாரதியார், மாமல்லபுரம், கம்பராமாயணம் குறித்தும், தமிழ்கலாசாரம் குறித்தும், பிரதமர் அதிகம் பேசி வருகிறார். தேசிய கல்வி கொள்கை, 22 மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. யார் எந்தமொழியையும் படிக்கலாம் என்கிறோம். இந்த வசதியை பா.ஜ., மட்டுமே கொடுத்துள்ளது.

தென் மாநிலங்களில், தமிழகம் அதிகநிதியை, திட்டங்களை, மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளது. தமிழக வரலாற்றில், 11 மருத்துவ கல்லுாரிகளை, ஓராண்டில் பெற்றுள்ளது. கர்நாடகாவிற்கு நான்குமருத்துவ கல்லுாரிகள் மட்டுமே வழங்கப்பட்டது. இவ்வாறு, சி.டி.ரவி கூறினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...