தனியார் துறைகளை, நிறுவனங்களை அவமதிக்கும் கலாச்சாரத்தை பொறுத்துக்கொள்ள முடியாது

மக்களவையில் தனியார்துறையை பிரதமர் மோடி பெருமைப்படுத்தி பேசியதற்கு இந்திய தொழிலதிபர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருடத்தின் முதல்கூட்டத்தொடர் என்பதால், நாடாளுமன்ற அவைகளில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இதற்கிடையே, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மக்களவையில் பேசுகையில், நாட்டில் தனியார் துறைகளை அவமதிக்கும் போக்கு, கலாச்சாரம் தொடரந்துவருகிறது. நாட்டில் பொதுத்துறை எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோமோ அதே அளவுக்கு தனியார் துறைக்குக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தனியார்துறையின் பங்களிப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகிறது.

குறிப்பாக, தொலைத் தொடர்புத்துறையிலும், மருத்துவத்துறையிலும் தனியார் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு பல்வேறுவழிகளிலும் உதவி வருகின்றனர். ஏழை மக்கள்கூட ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள், மொபைல் போன்கள் விலை கடும்போட்டி காரணமாக மக்கள் எளிதாக வாங்கும் வகையில் குறைந்துள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் இந்தியாவால் மனிதநேய உதவிகளை பலநாடுகளுக்கும் செய்யமுடிகிறது என்றால், அதற்கு தனியார் துறை, தனியார் நிறுவனங்களின் பங்களிப்பால்தான் முடிகிறது. எனவே, தனியார் துறைகளையும், தனியார் நிறுவனங்களையும் அவமதிக்கும் கலாச்சாரம், போக்கை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது.

தனியார் துறைக்கு எதிராக நாம் நமது அவதூறான வார்த்தைகளை பயன்படுத்துவதன் மூலம் சிலரின்வாக்குகளை கடந்த காலத்தில் பெற்றிருக்கலாம். ஆனால், அந்தகாலம் கடந்துவிட்டது என்றார். நமது இளைஞர்களையும் இவ்வாறு இழிவுபடுத்த முடியாது. மனித குலத்துக்கு இன்று இந்தியா ஏதேனும் வகையில் பயன்படும் என்றால் அதில் தனியார்துறைக்கே அதிக பங்கு என்று பேசியிருந்தார். இந்நிலையில், தனியார்துறை குறித்து பிரதமர் மோடி பெருமைப்படுத்தி பேசியதற்கு இந்திய தொழிலதிபர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மகீந்திரா குழும சேர்மன் ஆனந்த் மஹீந்திரா கூறுகையில், தொற்று நோய் காலக்கட்டத்தில் பிரதமரின் வார்த்தைகள் ஊக்குவிப்பாய் அமைந்துள்ளன. நாம்இப்போது நிர்வாகம் மற்றும் செயலில் எதிர்பார்ப்புக்கு இணங்க செயல்படவேண்டியது அவசியம் என்று பாராட்டியுள்ளார்.

ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத் தலைவர் சாஜன் ஜிண்டால் கூறுகையில், இந்திய தொழிலதிபர்களுக்கு முதல் முறையாக ஒருஇந்தியப் பிரதமர் மரியாதை அளித்துப் பேசியுள்ளார். மேலும், பிரதமர் மோடி பேசியது நாட்டிற்கு செல்வத்தையும், வேலை வாய்ப்பையும் வழங்கிடும் தொழிலதிபர்கள் சமூகத்துக்கு மிகப்பெரிய உத்வேகமாகும் என்று பாராட்டிப் பேசியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...