”கடந்த 10 ஆண்டுகளில் பார்லிமென்ட் கூட்டத் தொடருக்கு முன்னதாக, வெளிநாட்டு சக்திகள் சதி செய்து சர்ச்சை தீயை மூட்டி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் நடக்கும் முதல் கூட்டம் இது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் நேற்று துவங்கியது. அதற்கு முன்னதாக, செய்தியாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:
வரும், 2047க்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய, இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் புதிய நம்பிக்கையையும், சக்தியையும் அளிக்கும் என நம்புகிறேன்.
ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களை ஆசிர்வதிக்க வேண்டும் என, செல்வத்துக்கு அதிபதியான லட்சுமி தேவியிடம் வேண்டிக் கொண்டேன்.
இந்த கூட்டத் தொடரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும். விரிவான விவாதத்துக்குப் பின் அவை சட்டமாக்கப்படும்.
குறிப்பாக, பெண்களுக்கு சம உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், மதவெறி அல்லது நம்பிக்கை அடிப்படையிலான பாகுபாடுகள் அகற்றப்படுவதற்கும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக இந்த கூட்டத்தொடரில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
நம் நாடு இளமையானது. இப்போது, 20 – 25 வயதில் உள்ள இளைஞர்கள், 45 – 50 வயதாகும்போது, வளர்ந்த இந்தியாவின் முழுப்பயனை அடைவர்.
அந்த நேரத்தில் கொள்கைகளை உருவாக்கும் இடத்தில் அவர்கள் அமர்ந்திருப்பர். வளர்ந்த இந்தியாவை பெருமையுடன் முன்னெடுத்து செல்வர்.
எனவே, வளர்ந்த இந்தியா என்ற நம் தீர்மானத்தை நிறைவேற்ற, அனைத்து எம்.பி.,க்களும் இந்த கூட்டத்தொடரில் தங்கள் பங்களிப்பை அளிப்பர் என நம்புகிறேன்.
கடந்த, 2014 முதல், பார்லிமென்ட் கூட்டத் தொடர் கூடுவதற்கு முன், ஏதாவது ஒரு சர்ச்சை தீயை மூட்டுவதை வெளிநாட்டு சக்திகள் வழக்கமாக வைத்துள்ளன. முதல்முறையாக எவ்வித குழப்பமின்றி கூட்டத்தொடர் துவங்குவதை, இப்போது தான் பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |