ஜனாதிபதி உரை பற்றிய சோனியா கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம்

”ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் பேசியது, இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அவமதிப்பதற்கு சமம்,” என்று பிரதமர் மோடி பேசினார்.

இன்று பார்லியின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார். அவரது பேச்சு போர் அடிக்கும் வகையில் இருந்ததாகவும், மோசமான விஷயம் என்றும், பிரியங்கா, சோனியா ஆகியோர் கூறினர்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் சர்ச்சைகளுக்கு பதில் கூறாத ஜனாதிபதி மாளிகை கூட, காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளது.

பா.ஜ., தலைவர்கள் பலரும், காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டில்லியில் இன்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

அரச குடும்பத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர், ஜனாதிபதி உரை பற்றி கூறுகையில், பழங்குடியின பெண் ஒருவர் போர் அடிக்கும் உரையை வழங்குவதாக கூறியுள்ளார். அதே குடும்பத்தை சேர்ந்த இன்னொருவர், ஜனாதிபதியின் உரை, மோசமான விஷயம் என்று கூறியுள்ளார். இது, நாட்டில் இருக்கும் 10 கோடி பழங்குடி மக்களுக்கு ஏற்பட்ட அவமானம். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்பட்ட அவமானம்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...