மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி யாராலும் தடுக்கமுடியாது

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைவதை யாராலும் தடுக்கமுடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரலில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடிபோட்டி நிலவுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் மேற்கு வங்கத்தில் இப்போதே தீவிரபிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்கத்தின் கூச்பெகர் பகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி வளர்ச்சி பாதையில் ஆட்சி நடத்திவருகிறார். ஒட்டுமொத்த நாட்டையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிறார். முதல்வர் மம்தா பானர்ஜி அழிவுப் பாதையில் ஆட்சி நடத்துகிறார். கடந்த 10 ஆண்டுகள் மேற்குவங்கத்தில் மம்தா ஆட்சி நடத்தியுள்ளார். மாநிலம் இன்னமும் பின்தங்கிய நிலையில் உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் பாஜகவுக்கு வாய்ப்பு அளியுங்கள். அடுத்த 5 ஆண்டுகளில் மேற்குவங்கம், தங்கவங்கமாக மாறும்.

மத்திய அரசின் விவசாயிகளுக்கான நிதியுதவியை மம்தா பானர்ஜி தடுத்து நிறுத்தியுள்ளார். ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தை முடக்கியுள்ளார். இதேபோல மத்திய அரசின் 115 நலத்திட்டங்களை தடுத்து வருகிறார். மேற்கு வங்கத்தை மம்தா அழித்து வருகிறார். மக்களுக்காக அவர் ஆட்சி நடத்தவில்லை. தனது உறவினர்களின் நலனுக்காக ஆட்சி நடத்துகிறார்.

துர்கா பூஜை, சரஸ்வதி பூஜை நடத்துவதற்கு அனுமதி மறுக்க படுகிறது. ஜெய் ராம் நாமத்தை உச்சரிப்பது குற்றமாக கருதப்படுகிறது. இங்குஇல்லாமல் பாகிஸ்தானிலா ஜெய் ராம் நாமத்தை உச்சரிக்க முடியும். சட்டப்பேரவை தேர்தல் முடிந்தபிறகு மம்தாவே, ஜெய் ராம் என கூறுவார்.

ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 130 பாஜக தொண்டர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அரசியல் படுகொலைகளில் மேற்குவங்கம் முதல் இடத்தில் உள்ளது.

மேற்கு வங்க மக்கள் கால்பந்து விளையாட்டை அதிகம்நேசிக்கின்றனர். ஆட்சி ஆட்டத்தில் மம்தா அரசு பல்வேறு தவறுகளை இழைத்துவருகிறது. இதை மக்கள்உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் ராமர் அட்டையை காண்பித்து மம்தாவை ஆட்சி ஆட்டத்தில் இருந்து வெளியேற்றுவார்கள். மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைவதை யாராலும் தடுக்கமுடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.