மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி யாராலும் தடுக்கமுடியாது

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைவதை யாராலும் தடுக்கமுடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரலில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடிபோட்டி நிலவுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் மேற்கு வங்கத்தில் இப்போதே தீவிரபிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்கத்தின் கூச்பெகர் பகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி வளர்ச்சி பாதையில் ஆட்சி நடத்திவருகிறார். ஒட்டுமொத்த நாட்டையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிறார். முதல்வர் மம்தா பானர்ஜி அழிவுப் பாதையில் ஆட்சி நடத்துகிறார். கடந்த 10 ஆண்டுகள் மேற்குவங்கத்தில் மம்தா ஆட்சி நடத்தியுள்ளார். மாநிலம் இன்னமும் பின்தங்கிய நிலையில் உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் பாஜகவுக்கு வாய்ப்பு அளியுங்கள். அடுத்த 5 ஆண்டுகளில் மேற்குவங்கம், தங்கவங்கமாக மாறும்.

மத்திய அரசின் விவசாயிகளுக்கான நிதியுதவியை மம்தா பானர்ஜி தடுத்து நிறுத்தியுள்ளார். ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தை முடக்கியுள்ளார். இதேபோல மத்திய அரசின் 115 நலத்திட்டங்களை தடுத்து வருகிறார். மேற்கு வங்கத்தை மம்தா அழித்து வருகிறார். மக்களுக்காக அவர் ஆட்சி நடத்தவில்லை. தனது உறவினர்களின் நலனுக்காக ஆட்சி நடத்துகிறார்.

துர்கா பூஜை, சரஸ்வதி பூஜை நடத்துவதற்கு அனுமதி மறுக்க படுகிறது. ஜெய் ராம் நாமத்தை உச்சரிப்பது குற்றமாக கருதப்படுகிறது. இங்குஇல்லாமல் பாகிஸ்தானிலா ஜெய் ராம் நாமத்தை உச்சரிக்க முடியும். சட்டப்பேரவை தேர்தல் முடிந்தபிறகு மம்தாவே, ஜெய் ராம் என கூறுவார்.

ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 130 பாஜக தொண்டர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அரசியல் படுகொலைகளில் மேற்குவங்கம் முதல் இடத்தில் உள்ளது.

மேற்கு வங்க மக்கள் கால்பந்து விளையாட்டை அதிகம்நேசிக்கின்றனர். ஆட்சி ஆட்டத்தில் மம்தா அரசு பல்வேறு தவறுகளை இழைத்துவருகிறது. இதை மக்கள்உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் ராமர் அட்டையை காண்பித்து மம்தாவை ஆட்சி ஆட்டத்தில் இருந்து வெளியேற்றுவார்கள். மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைவதை யாராலும் தடுக்கமுடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...