மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி யாராலும் தடுக்கமுடியாது

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைவதை யாராலும் தடுக்கமுடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரலில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடிபோட்டி நிலவுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் மேற்கு வங்கத்தில் இப்போதே தீவிரபிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்கத்தின் கூச்பெகர் பகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி வளர்ச்சி பாதையில் ஆட்சி நடத்திவருகிறார். ஒட்டுமொத்த நாட்டையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிறார். முதல்வர் மம்தா பானர்ஜி அழிவுப் பாதையில் ஆட்சி நடத்துகிறார். கடந்த 10 ஆண்டுகள் மேற்குவங்கத்தில் மம்தா ஆட்சி நடத்தியுள்ளார். மாநிலம் இன்னமும் பின்தங்கிய நிலையில் உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் பாஜகவுக்கு வாய்ப்பு அளியுங்கள். அடுத்த 5 ஆண்டுகளில் மேற்குவங்கம், தங்கவங்கமாக மாறும்.

மத்திய அரசின் விவசாயிகளுக்கான நிதியுதவியை மம்தா பானர்ஜி தடுத்து நிறுத்தியுள்ளார். ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தை முடக்கியுள்ளார். இதேபோல மத்திய அரசின் 115 நலத்திட்டங்களை தடுத்து வருகிறார். மேற்கு வங்கத்தை மம்தா அழித்து வருகிறார். மக்களுக்காக அவர் ஆட்சி நடத்தவில்லை. தனது உறவினர்களின் நலனுக்காக ஆட்சி நடத்துகிறார்.

துர்கா பூஜை, சரஸ்வதி பூஜை நடத்துவதற்கு அனுமதி மறுக்க படுகிறது. ஜெய் ராம் நாமத்தை உச்சரிப்பது குற்றமாக கருதப்படுகிறது. இங்குஇல்லாமல் பாகிஸ்தானிலா ஜெய் ராம் நாமத்தை உச்சரிக்க முடியும். சட்டப்பேரவை தேர்தல் முடிந்தபிறகு மம்தாவே, ஜெய் ராம் என கூறுவார்.

ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 130 பாஜக தொண்டர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அரசியல் படுகொலைகளில் மேற்குவங்கம் முதல் இடத்தில் உள்ளது.

மேற்கு வங்க மக்கள் கால்பந்து விளையாட்டை அதிகம்நேசிக்கின்றனர். ஆட்சி ஆட்டத்தில் மம்தா அரசு பல்வேறு தவறுகளை இழைத்துவருகிறது. இதை மக்கள்உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் ராமர் அட்டையை காண்பித்து மம்தாவை ஆட்சி ஆட்டத்தில் இருந்து வெளியேற்றுவார்கள். மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைவதை யாராலும் தடுக்கமுடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...