புதுச்சேரி கவர்னராக தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு

புதுச்சேரியில் அமைச்சர்களும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் அடுத்தடுத்து ராஜினாமாசெய்து வருவதால், முதல்வர் நாராயணசாமி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளநிலையில் கவர்னர் கிரண்பேடி விடுவிக்கப்பட்டு ,தெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு கூடுதல்பொறுப்பு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இதில், சீனியர் அமைச்சராக பதவிவகித்த நமச்சிவாயம், காங்., – எம்எல்ஏ.,க்கள், தீப்பாய்ந்தான் சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்த, மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான்குமார், ஆகியோரின் ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.இதையடுத்து, முதல்வர் நாராயண சாமி அரசு கவிழும்நிலையில் உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கிரண்பேடி புதுச்சேரிகவர்னர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, தெலுங்கானா கவர்னர் தமிழிசையிடம் கூடுதல்பொறுப்பு வழங்கப்பட்டதாகவும், இதுதொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் மோதல் தொடர்கதையாகி வருகிறது. கவர்னர் கிரண்பேடியை மாற்றவேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன் டில்லி சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை முதல்வர் நாராயணசாமி சந்தித்து வலியுறுத்தினார். விரைவில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் கிரண்பேடி கவர்னர்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...