தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து கவர்னர் ரவி பிரதமர் மோடியுடன் ஆலோசனை

டில்லியில் பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தின் அரசியல் சூழல், சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, 4 நாட்கள் பயணமாக டில்லி சென்றுள்ளார். அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இது தனிப்பட்ட பயணம் என கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், இன்று (டிச.,24) டில்லி லோக் கல்யாண் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்தில் மோடியை, கவர்னர் ரவி சந்தித்து பேசி உள்ளார். அப்போது, தமிழகத்தின் அரசியல் சூழல், சட்டம் ஒழுங்கு குறித்து, பிரதமர் மோடியுடன் கவர்னர் ரவி ஆலோசனை நடத்தியதாக, டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ஜனவரி 6ம் தேதி, கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை கூடும் நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளதால் அரசியல் களத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...