டில்லியில் பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தின் அரசியல் சூழல், சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, 4 நாட்கள் பயணமாக டில்லி சென்றுள்ளார். அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இது தனிப்பட்ட பயணம் என கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், இன்று (டிச.,24) டில்லி லோக் கல்யாண் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்தில் மோடியை, கவர்னர் ரவி சந்தித்து பேசி உள்ளார். அப்போது, தமிழகத்தின் அரசியல் சூழல், சட்டம் ஒழுங்கு குறித்து, பிரதமர் மோடியுடன் கவர்னர் ரவி ஆலோசனை நடத்தியதாக, டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ஜனவரி 6ம் தேதி, கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை கூடும் நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளதால் அரசியல் களத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |