தற்சார்பு இந்தியா என்பது நம் உணர்வு சார்ந்தது

தற்சார்பு இந்தியா என்பது, வெறும்கோஷமல்ல; நம் உணர்வு சார்ந்தது. இதனால், மக்களிடையே தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. அதன் தாக்கத்தை எல்லையில் பார்த்திருப்பீர்கள்,” என, பிரதமர் நரேந்திரமோடி பெருமையுடன் குறிப்பிட்டார்.

‘நாஸ்காம்’ எனப்படும், தேசிய மென்பொருள் மற்றும் சேவைநிறுனங்கள் சங்கத்தின் சார்பில், தொழில்நுட்பம் மற்றும் தலைமைபண்பு தொடர்பான கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:’ஆத்மநிர்பர் பாரத்’ எனப்படும், தற்சார்பு இந்தியா என்பது வெறும் கோஷமல்ல. அது, நம் உணர்வுசார்ந்தது; நம் மண்ணைச் சார்ந்தது என்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு தொழில்நுட்பம், உள்நாட்டில் தயாரிக்கப் பட்டது என, நம் நாட்டின் வளர்ச்சியுடன் இணைந்தது. இது, மக்களிடையே தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளது.லடாக்கில் சீனாவின் அத்துமீறலை, நம்ராணுவம் முறியடித்துள்ளது. அங்கு முகாமிட்டிருந்த, சீன படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

இதுவே, தற்சார்பு இந்தியா, மக்களிடையே ஏற்படுத்தியுள்ள நம்பிக்கையின் ஒருஉதாரணம்.நாட்டின் பொருளாதாரத்தை, 350 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு உயர்த்துவதற்கு, தற்சார்புமுயற்சிகளே முக்கியம். அந்த வகையில், ‘மேப்பிங்’ எனப்படும் நாட்டின் வரைபடங்கள் தயாரித்தல் மற்றும் புவி சார் தகவல்களை சேகரிப்பதில், புதிய சீர்திருத்தத்தை ஏற்படுத்திஉள்ளோம்.இதுவரை இருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன. நம்நாட்டு மக்கள் மற்றும் நிறுவனங்கள் மீது, இந்த அரசு மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. அதன்படியே, இந்தகட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.அதனால், ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்கள் உட்பட, நம் தொழில்துறை மிகுந்த பலனை பெற உள்ளன. புவிசார் தகவல்சேகரிப்பு வாயிலாக, உள்நாட்டில், 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தொழில் வளர்ச்சியை காணலாம்; 22 லட்சம்பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.

நாஸ்காம்’ நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:உலக நாடுகளுக்கு தலைமையேற்கும் மிகப்பெரும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. நம்மிடம் அறிவுத்திறன் உள்ளது; புதுமை கண்டுபிடிப்புகள் உள்ளன. ஆனால், அவை நடைமுறைக்கு வருவதே முக்கியம்.நாட்டின் சிறியநகரங்களில், பலதிறமையான கண்டுபிடிப்பாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு உங்கள் ஆதரவு தேவை. அதற்கு உதவுவதற்காக, இரண்டாம் நிலை நகரங்களில் கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.கொரோனா காலத்தில், மற்றதுறைகள் தத்தளித்தாலும், தகவல் தொழில்நுட்பத் துறை, 2 சதவீத வளர்ச்சியை அடைந்தது.

எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில், உள்நாடு, வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால், தென் மாநிலங்களில், பல்வேறு பகுதிகள் பயன் அடையும்.

மாற்று எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க, சூரிய மின் உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. எல்.இ.டி., பல்புகளை பயன்படுத்துவதன் வாயிலாக, மின்சாரத் தேவை குறைக்கப்பட்டு வருகிறது.சூரிய மின்சாரத்தில் இயங்கும் மோட்டார்கள், விவசாயிகளுக்கு உதவியாக உள்ளன. இந்தியாவில் அதிகரிக்கும் எரிசக்தி தேவையை சமாளிக்க, மாற்று எரிசக்திகள் உதவியாக இருக்கும். இந்தியாவின் முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. சுத்தமான மற்றும் பசுமையான எரிசக்திக்காகவும், எரிசக்திக்காக மற்ற நாடுகளை சார்ந்திருப்பதை குறைப்பதற்காகவும், உழைக்க வேண்டியது நம் கடமை. கடந்த, 2019 – -2020ம் ஆண்டில், உள்நாட்டின் தேவைக்காக, 85 சதவீத எண்ணெய் மற்றும் 53 சதவீத இயற்கை எரிவாயுவை, இந்தியா இறக்குமதி செய்தது; இதற்காக யாரையும் நான் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை.

ஆனால் எரிசக்தியில், இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைப்பதில், முந்தைய அரசுகள் அதிக கவனம் செலுத்தி இருந்தால், நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு உதவ, எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்க, மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. மக்களின் வாழ்க்கை எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக, பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என, ஊக்கப்படுத்தி வருகிறோம். இயற்கை எரிவாயுவை, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்கும் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...