மேக் இன் இந்தியா திட்டத்தின் 10 ஆண்டுகள்

‘மேக் இன் இந்தியா’ முன்முயற்சி மின்னணுத் துறையின் வளர்ச்சிக்கு சீராக பங்களிப்பு செய்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்துள்ளது. தொழில்நுட்பத்  திறன்களை மேம்படுத்தியுள்ளது. தற்சார்பு இந்தியா பார்வைக்கு  உதவியுள்ளது. மேக்-இன்-இந்தியா இயக்கத்தின் 10 வது ஆண்டு விழாவில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் எஸ்.கிருஷ்ணன், இந்தியாவின் மின்னணுத் துறையில் மேக் இன் இந்தியா முன்முயற்சியின் மிகப்பெரிய தாக்கம் பற்றி எடுத்துரைத்தார். மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் துறைகளில் ஒன்றாக மின்னணுத்துறை உருவெடுத்துள்ளது என்று அவர் கூறினார்.

மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் இந்தியாவின் ஏற்றுமதி, 2014-15 ஆம்ஆண்டில் 38,263 கோடி ரூபாய் என்பதிலிருந்து கணிசமாக உயர்ந்து தற்போது 2.41 லட்சம் கோடி ரூபாயாக அல்லது 29.1 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது மற்ற ஏற்றுமதி துறைகளின் வளர்ச்சியை விட கணிசமாக வேகமடைந்துள்ளது என்று அவர் கூறினார்.

2014-15 ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்கப்பட்ட செல்பேசிகளில் 26% மட்டுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. மீதமுள்ளவை இறக்குமதி செய்யப்பட்டவை. இன்று இந்தியாவில் விற்பனையாகும் செல்பேசிகளில் 99.2% இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை.

இந்தியாவில் ஆண்டுக்கு 325 முதல் 330 மில்லியன் செல்பேசிகளை உற்பத்தி செய்கிறோம். சுமார் ஒரு பில்லியன் செல்பேசிகள்  இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன.

2023-24-ம் ஆண்டில் செல்பேசி ஏற்றுமதி சுமார் 1.2 லட்சம் கோடியாக இருந்தது. இது 2014-15-ல் இருந்ததை விட 77 மடங்கு அதிகமாகும். 2014-15-ம் ஆண்டில் செல்பேசி ஏற்றுமதி 1,566 கோடி ரூபாயாக இருந்தது, இது இப்போது சுமார் 1,20,000 கோடி ரூபாயை எட்டியுள்ளது என்ற விவரங்களை  கிருஷ்ணன் தெரிவித்தார்.

செல்பேசி துறைக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம் குறித்து பேசிய திரு கிருஷ்ணன், நாங்கள்  ஒட்டுமொத்த உற்பத்தி இலக்கை தாண்டிவிட்டோம் என்றார். உற்பத்தி மதிப்பு ரூ. 6 லட்சத்து 661 கோடியை எட்டியிருப்பதாகவும் முதலீட்டின் மொத்த மதிப்பு ரூ.9,100 கோடியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். திட்டத்தின் அசல் இலக்குபடி.மொத்தவேலைவாய்ப்பு 1,22,613 ஆக உள்ளது.எனவே இதுவும் மேக் இன் இந்தியாவின் வெற்றிக் கதைகளில் ஒன்றாகும். இன்று மின்னணுத் துறை நாடு முழுவதும் சுமார் 1.2 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவில் குறைகடத்தி உற்பத்தித் தளத்தை அமைப்பது என்பது மேக் இன் இந்தியா திட்டத்தின் மற்றொரு பெரிய பகுதியாகும் என்றும், இதை அடைய  இந்தியா அறுபது ஆண்டுகளுக்கு மேலாக  முயன்று வருகிறது என்றும் திரு கிருஷ்ணன் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...