மேக் இன் இந்தியா திட்டத்தின் 10 ஆண்டுகள்

‘மேக் இன் இந்தியா’ முன்முயற்சி மின்னணுத் துறையின் வளர்ச்சிக்கு சீராக பங்களிப்பு செய்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்துள்ளது. தொழில்நுட்பத்  திறன்களை மேம்படுத்தியுள்ளது. தற்சார்பு இந்தியா பார்வைக்கு  உதவியுள்ளது. மேக்-இன்-இந்தியா இயக்கத்தின் 10 வது ஆண்டு விழாவில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் எஸ்.கிருஷ்ணன், இந்தியாவின் மின்னணுத் துறையில் மேக் இன் இந்தியா முன்முயற்சியின் மிகப்பெரிய தாக்கம் பற்றி எடுத்துரைத்தார். மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் துறைகளில் ஒன்றாக மின்னணுத்துறை உருவெடுத்துள்ளது என்று அவர் கூறினார்.

மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் இந்தியாவின் ஏற்றுமதி, 2014-15 ஆம்ஆண்டில் 38,263 கோடி ரூபாய் என்பதிலிருந்து கணிசமாக உயர்ந்து தற்போது 2.41 லட்சம் கோடி ரூபாயாக அல்லது 29.1 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது மற்ற ஏற்றுமதி துறைகளின் வளர்ச்சியை விட கணிசமாக வேகமடைந்துள்ளது என்று அவர் கூறினார்.

2014-15 ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்கப்பட்ட செல்பேசிகளில் 26% மட்டுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. மீதமுள்ளவை இறக்குமதி செய்யப்பட்டவை. இன்று இந்தியாவில் விற்பனையாகும் செல்பேசிகளில் 99.2% இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை.

இந்தியாவில் ஆண்டுக்கு 325 முதல் 330 மில்லியன் செல்பேசிகளை உற்பத்தி செய்கிறோம். சுமார் ஒரு பில்லியன் செல்பேசிகள்  இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன.

2023-24-ம் ஆண்டில் செல்பேசி ஏற்றுமதி சுமார் 1.2 லட்சம் கோடியாக இருந்தது. இது 2014-15-ல் இருந்ததை விட 77 மடங்கு அதிகமாகும். 2014-15-ம் ஆண்டில் செல்பேசி ஏற்றுமதி 1,566 கோடி ரூபாயாக இருந்தது, இது இப்போது சுமார் 1,20,000 கோடி ரூபாயை எட்டியுள்ளது என்ற விவரங்களை  கிருஷ்ணன் தெரிவித்தார்.

செல்பேசி துறைக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம் குறித்து பேசிய திரு கிருஷ்ணன், நாங்கள்  ஒட்டுமொத்த உற்பத்தி இலக்கை தாண்டிவிட்டோம் என்றார். உற்பத்தி மதிப்பு ரூ. 6 லட்சத்து 661 கோடியை எட்டியிருப்பதாகவும் முதலீட்டின் மொத்த மதிப்பு ரூ.9,100 கோடியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். திட்டத்தின் அசல் இலக்குபடி.மொத்தவேலைவாய்ப்பு 1,22,613 ஆக உள்ளது.எனவே இதுவும் மேக் இன் இந்தியாவின் வெற்றிக் கதைகளில் ஒன்றாகும். இன்று மின்னணுத் துறை நாடு முழுவதும் சுமார் 1.2 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவில் குறைகடத்தி உற்பத்தித் தளத்தை அமைப்பது என்பது மேக் இன் இந்தியா திட்டத்தின் மற்றொரு பெரிய பகுதியாகும் என்றும், இதை அடைய  இந்தியா அறுபது ஆண்டுகளுக்கு மேலாக  முயன்று வருகிறது என்றும் திரு கிருஷ்ணன் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உ ...

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி! பஹல்காமில் தாக்குதல் நடந்த சூழ்நிலையில், இந்திய ராணுவ தளபதி ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீட ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி காஷ்மீர் எல்லைக் கோட்டுப்பகுதியில் ஒரு சில இடங்களில், ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவா ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவாத தீ.. தண்ணீரால் பதிலடி தந்தது இந்தியா பூமியில் ஒரு சொர்க்கம் இருந்தால், அது இது தான்... ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்ற ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்றுமை குரல் : பயங்கரவாதத்தை ஒடுக்க சூளுரை பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக டில்லியில் நேற்று நடந்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிற ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிறோம் – இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் உறுதி ''இந்த துயரமான நேரத்தில் பிரான்ஸ், இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.