மருத்துவ சேவைகளுக்கான உபகரண ங்களை உற்பத்திசெய்வது தற்சார்பு இந்தியா என்ற கொள்கையின் பயணத்தில் ஒருமுக்கிய மைல்கல்

இறக்குமதி சுமையை குறைப் பதற்காக முக்கிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரண ங்கள் உள் நாட்டிலேயே உற்பத்தி செய்வது தொடர்பாக மத்திய அரசு முனைப்புடன் செயல் படுகிறது என்று மத்திய சுகாதார மற்றும் இரசாயனத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். உள்நாட்டிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ சேவைகளுக்கான உபகரண ங்களை உற்பத்திசெய்வது தற்சார்பு இந்தியா என்ற கொள்கையின் பயணத்தில் ஒருமுக்கிய மைல்கல் ஆகும்.

மத்திய அரசின் தற்சார்பு இந்தியா கொள்கையின் கீழ் மருந்துகள் துறை உற்பத்தி தொடர்பான ஊக்கத் தொகை திட்டத்தை கடந்த 2021ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்திற்கு 6 ஆண்டு காலத்திற்கு ரூ.15,000 கோடிகள் மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பங்கேற்க 55 விண்ணப் பங்கள் வந்துள்ளது. இதில் 20 குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை நிறுவனங்களும் அடங்கும். விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் 2022-2023 நிதியாண்டில் சுமார் ரூ.2200 கோடி ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

உற்பத்தி தொடர்பான ஊக்கத் தொகை திட்டம் தொடர்பாக அதிகளவில் மருந்து பொருட்களை வாங்குபவர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்குப வர்கள் என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தத்திட்டம் நடைமுறைக்கு வந்து ஓராண்டு காலகட்டத்தில் பல்வேறு முக்கிய செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது. மேலும் சுமார் 1900 பேர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது. புற்று நோய் பாது காப்பு சம்மந்தமாக ரேடியோ தெரபி மருத்துவ உபகரணங்கள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ சேவைகள் மேற்கொள்ள படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மோடி – டிரம்ப் தொலை பேசி உரையா ...

மோடி – டிரம்ப் தொலை பேசி உரையாடல் பிரதமா் நரேந்திரமோடியும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் தொலைபேசி ...

காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய ...

காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய முதலீடு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை.. பதவ ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை.. பதவி நீக்கம் செய்ய முடியுமா? திமுகவின் மாஸ்டர் பிளான் திருப்பரங்குன்றம் மலையில், சிக்கந்தர் தர்காவை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள ...

தவறு இண்டிகோவிடம் தான் உள்ளது

தவறு இண்டிகோவிடம் தான் உள்ளது தவறு இண்டிகோவிடம்தான் உள்ளது என்றும், விரைவில் நிலைமை சீராகிவிடும், ...

இந்தியாவுக்கு மோடி பிரதமராகக் ...

இந்தியாவுக்கு மோடி பிரதமராகக் கிடைத்தது அடித்த அதிர்ஷ்டமே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , பிரதமர் நரேந்திரமோடியின் ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...