இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் – பிரதமர் மோடி முதலீட்டார்களுக்கு அழைப்பு

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் என பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான உச்சி மாநாடு, ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிஸ் நகரில் நடக்கிறது. பிரான்சுடன் இணைந்து இந்தியா இதை நடத்துகிறது. இதில், பல நாட்டுத் தலைவர்கள், தொழில்நுட்பத் துறை நிறுவனங்களின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையொட்டி நடந்த, 14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்த சந்திப்பு இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே சிறந்த வணிக உறவை ஏற்படுத்தும். 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க நாம் செயல்பட்டு வரும் அதே வேளையில் வலுவான மிக உறவை உருவாக்குவதற்கும் இது சரியான நேரம். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவதை நான் காண்கிறேன்.

AI, விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் இந்தியா பல்வேறு சாதனைகளை செய்து காட்டியுள்ளது. 2047ம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் அணுசக்தியை இலக்காகக் கொண்டு செயல்படுகிறோம். இந்தத் துறை தனியாருக்கும் வழங்கப்பட்டுள்ளது.இன்று இந்தியா வேகமாக உலக அளவில் முதலீடு செய்து வருகிறது.

டந்த தசாப்தத்தில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றத்தின் பாதையை பின்பற்றி, இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறி உள்ளது. விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்.

உலகளாவிய அரங்கில் எங்களின் அடையாளம் என்னவென்றால், இன்று, இந்தியா ஒரு விருப்பமான உலகளாவிய முதலீட்டு இடமாக மாறி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

சுந்தர் பிச்சையுடன் சந்திப்பு

தொடர்ந்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்துக்காக இணைந்து பாடுபடுவது குறித்து விவாதித்ததாகவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியாவுக்கு கிடைக்கப்போகும் அற்புத வாய்ப்புகள் குறித்து ஆலோசித்ததாகவும், பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...