பிரதான் மந்திரி ஆவாஸ்யோஜனா திட்டத்தின் கீழ் 56,000 வீடுகளைக்கட்ட மத்திய அரசு ஒப்புதல்

பிரதான் மந்திரி ஆவாஸ்யோஜனா திட்டத்தின் கீழ் 56,000 வீடுகளைக்கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

வீடற்ற ஏழைகளுக்கு வீட்டுவசதியை ஏற்படுத்தித்தரும் நோக்கத்தில் மத்திய மோடி அரசால் 2015ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் பிரதான்மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் 2022ஆம் ஆண்டுக்குள் வீடு கட்டித்தர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 43 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 73 லட்சம் வீடுகளுக்கான கட்டுமானபணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

2022ஆம் ஆண்டுக்குள் நகர்ப்புறங்களில் 1.12 கோடி வீடுகளைக் கட்டிமுடிக்க இலக்கு உள்ளது. இத்திட்டத்தை தீவிரப்படுத்த தற்போது மத்திய கண்காணிப்புக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் 56,368 வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அனைத்துமாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் நிர்ணயித்த காலத்தில் வீடுகளைக் கட்டிமுடித்து பயனாளிகளுக்கு வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

லைட் ஹவுஸ் பிராஜெக்ட் மற்றும் டிமான்ஸ்ட்ரேசன் ஹவுசிங் பிராஜெக்ட் ஆகிய இரண்டு புதியதிட்டங்களையும் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி 2021 ஜனவரி 1ஆம் தேதி நாட்டினார். லைட்ஹவுஸ் பிராஜெக்ட் திட்டத்தின் கீழ் சென்னை, லக்னோ, ராஞ்சி, ராஜ்கோட், அகர்தாலா, இந்தூர் ஆகிய நகரங்களில் வீடுகள் கட்டப்படும். இத்திட்டத்தில் இணைவதற்கான ஆன்லைன்பதிவு முறையையும் மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.