பிரதான் மந்திரி ஆவாஸ்யோஜனா திட்டத்தின் கீழ் 56,000 வீடுகளைக்கட்ட மத்திய அரசு ஒப்புதல்

பிரதான் மந்திரி ஆவாஸ்யோஜனா திட்டத்தின் கீழ் 56,000 வீடுகளைக்கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

வீடற்ற ஏழைகளுக்கு வீட்டுவசதியை ஏற்படுத்தித்தரும் நோக்கத்தில் மத்திய மோடி அரசால் 2015ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் பிரதான்மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் 2022ஆம் ஆண்டுக்குள் வீடு கட்டித்தர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 43 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 73 லட்சம் வீடுகளுக்கான கட்டுமானபணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

2022ஆம் ஆண்டுக்குள் நகர்ப்புறங்களில் 1.12 கோடி வீடுகளைக் கட்டிமுடிக்க இலக்கு உள்ளது. இத்திட்டத்தை தீவிரப்படுத்த தற்போது மத்திய கண்காணிப்புக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் 56,368 வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அனைத்துமாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் நிர்ணயித்த காலத்தில் வீடுகளைக் கட்டிமுடித்து பயனாளிகளுக்கு வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

லைட் ஹவுஸ் பிராஜெக்ட் மற்றும் டிமான்ஸ்ட்ரேசன் ஹவுசிங் பிராஜெக்ட் ஆகிய இரண்டு புதியதிட்டங்களையும் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி 2021 ஜனவரி 1ஆம் தேதி நாட்டினார். லைட்ஹவுஸ் பிராஜெக்ட் திட்டத்தின் கீழ் சென்னை, லக்னோ, ராஞ்சி, ராஜ்கோட், அகர்தாலா, இந்தூர் ஆகிய நகரங்களில் வீடுகள் கட்டப்படும். இத்திட்டத்தில் இணைவதற்கான ஆன்லைன்பதிவு முறையையும் மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...