பிரதான் மந்திரி ஆவாஸ்யோஜனா திட்டத்தின் கீழ் 56,000 வீடுகளைக்கட்ட மத்திய அரசு ஒப்புதல்

பிரதான் மந்திரி ஆவாஸ்யோஜனா திட்டத்தின் கீழ் 56,000 வீடுகளைக்கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

வீடற்ற ஏழைகளுக்கு வீட்டுவசதியை ஏற்படுத்தித்தரும் நோக்கத்தில் மத்திய மோடி அரசால் 2015ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் பிரதான்மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் 2022ஆம் ஆண்டுக்குள் வீடு கட்டித்தர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 43 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 73 லட்சம் வீடுகளுக்கான கட்டுமானபணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

2022ஆம் ஆண்டுக்குள் நகர்ப்புறங்களில் 1.12 கோடி வீடுகளைக் கட்டிமுடிக்க இலக்கு உள்ளது. இத்திட்டத்தை தீவிரப்படுத்த தற்போது மத்திய கண்காணிப்புக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் 56,368 வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அனைத்துமாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் நிர்ணயித்த காலத்தில் வீடுகளைக் கட்டிமுடித்து பயனாளிகளுக்கு வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

லைட் ஹவுஸ் பிராஜெக்ட் மற்றும் டிமான்ஸ்ட்ரேசன் ஹவுசிங் பிராஜெக்ட் ஆகிய இரண்டு புதியதிட்டங்களையும் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி 2021 ஜனவரி 1ஆம் தேதி நாட்டினார். லைட்ஹவுஸ் பிராஜெக்ட் திட்டத்தின் கீழ் சென்னை, லக்னோ, ராஞ்சி, ராஜ்கோட், அகர்தாலா, இந்தூர் ஆகிய நகரங்களில் வீடுகள் கட்டப்படும். இத்திட்டத்தில் இணைவதற்கான ஆன்லைன்பதிவு முறையையும் மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப் ...

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப்பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல், நில உரிமையின் நிர்வாகத்தை ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வின ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வினா குடிமக்களுக்கு நல்ல வாய்ப்பு இந்திய விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய சாதனையாக,சந்திரயான் -3 ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று கு ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 28 அன்று ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

மருத்துவ செய்திகள்

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...