கிராமப்புற பகுதிகளில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு

கிராமப்புறப் பகுதிகளில் “அனைவருக்கும் வீடு” என்ற நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில், அடிப்படை வசதிகளுடன் கூடிய உறுதியான வீடுகளைக் கட்டுவதற்கு தகுதி வாய்ந்த கிராமப்புற குடும்பங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக, 2016 ஏப்ரல் 1 முதல் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தை ஊரக மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஆரம்ப இலக்கு என்பது 2016-17 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் 2.95 கோடி வீடுகளைக் கட்டுவதாகும். 2024-25 முதல் 2028-29 நிதியாண்டு வரை மேலும் 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.   மத்திய அரசின் ஒப்புதலின்படி, இத்திட்டத்தின் கீழ் கூடுதல் தகுதியுள்ள ஊரகக் குடும்பங்களைக் கண்டறிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 17.09.2024 அன்று தொடங்கப்பட்ட ஆவாஸ்+ 2024 மொபைல் செயலி மூலம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த செயலியில் முன் பதிவு செய்யப்பட்ட நில அளவையர்கள் மூலம் சுய ஆய்வு மற்றும் உதவி நில அளவை ஆகிய இரண்டிற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட சர்வேயர்களை அறிமுகப்படுத்துவதற்கான பயிலரங்குகள் நடந்து வருகின்றன, தற்போது வரை 26 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டம் செயல்படுத்துகின்றன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி இத்தகவலை தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்