சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தால்தான் இந்தநிலை

இந்தியாவில் தற்போது பெட்ரோல்விலை உயர்வு மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது. தங்கத்தைவிட பெட்ரோல் விலைதான் அதிகமாக உயர்த்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல்விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளதால் வாகனஓட்டிகள் பெரும் அதிருப்தியில் உள்ளனர் பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றத்துக்கு தாங்கள் காரணமில்லை என்று நரேந்திர மோடி சமீபத்தில் கூறினார்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கச்சாஎண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால்தான் இப்போது இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக மோடி கூறியிருந்தார். அதேபோல, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விரைவில் பெட்ரோல் விலையேற்றத்துக்கு தீர்வுகிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியாவில் பெட்ரோல் விலையேற்றத்துக்கு சர்வதேச கச்சா எண்ணெய்விலை நிலவரம்தான் காரணம் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், “சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தால்தான் இந்தநிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தொடர்ந்து கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. கச்சா எண்ணெய்விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன் இந்தியாவிலும் பெட்ரோலியப் பொருட்களின் விலை கட்டுக்குள் வரும். பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவருவது குறித்து கோரிக்கைகள் உள்ளன. இதுகுறித்த இறுதிமுடிவை ஜிஎஸ்டி கவுன்சில்தான் மேற்கொள்ளும். பெட்ரோல் விலையேற்றத்துக்கு மத்திய அரசை எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது முறையல்ல” என்றார்.

கொரோனா ஊரடங்கால் மத்திய அரசின் வரிவருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்ததையும் தர்மேந்திர பிரதான் சுட்டிக் காட்டினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...