சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தால்தான் இந்தநிலை

இந்தியாவில் தற்போது பெட்ரோல்விலை உயர்வு மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது. தங்கத்தைவிட பெட்ரோல் விலைதான் அதிகமாக உயர்த்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல்விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளதால் வாகனஓட்டிகள் பெரும் அதிருப்தியில் உள்ளனர் பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றத்துக்கு தாங்கள் காரணமில்லை என்று நரேந்திர மோடி சமீபத்தில் கூறினார்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கச்சாஎண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால்தான் இப்போது இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக மோடி கூறியிருந்தார். அதேபோல, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விரைவில் பெட்ரோல் விலையேற்றத்துக்கு தீர்வுகிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியாவில் பெட்ரோல் விலையேற்றத்துக்கு சர்வதேச கச்சா எண்ணெய்விலை நிலவரம்தான் காரணம் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், “சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தால்தான் இந்தநிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தொடர்ந்து கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. கச்சா எண்ணெய்விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன் இந்தியாவிலும் பெட்ரோலியப் பொருட்களின் விலை கட்டுக்குள் வரும். பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவருவது குறித்து கோரிக்கைகள் உள்ளன. இதுகுறித்த இறுதிமுடிவை ஜிஎஸ்டி கவுன்சில்தான் மேற்கொள்ளும். பெட்ரோல் விலையேற்றத்துக்கு மத்திய அரசை எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது முறையல்ல” என்றார்.

கொரோனா ஊரடங்கால் மத்திய அரசின் வரிவருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்ததையும் தர்மேந்திர பிரதான் சுட்டிக் காட்டினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.