”பெட்ரோல், டீசல் உள்ளிட்ட படிம எரிபொருட்களுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்காமல், சுற்றுச்சூழல் மாசு பிரச்னையை தீர்க்க முடியாது,” என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
டில்லியில், நிகழ்ச்சி ஒன்றில் நேற்று அவர் பேசியதாவது: உயிரி எரிபொருள் பொருளாதாரம் தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவில் அது நல்ல நிலையில் உள்ளது. நாட்டின் மொத்த காற்று மாசில், 40 சதவீதம் வாகனப் போக்குவரத்தால் ஏற்படுகிறது.
காற்று மாசு பெரும் பிரச்னையாக மாறி வரும் சூழலில், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்காமல் காற்று மாசை குறைக்க முடியாது. பெட்ரோல், டீசலுக்கு மாற்றான எரிபொருளை நாம் நாட வேண்டியுள்ளது. பஞ்சாப், ஹரியானா, மஹாராஷ்டிராவில், வைக்கோலில் இருந்து உயிரி இயற்கை எரிவாயு தயாரிக்கும், 400 திட்டங்கள் செயல்படுகின்றன. ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக இந்தியாவை வளர்ச்சி பெறச் செய்ய, பிரதமர் மோடி இலக்குடன் செயல்படுகிறார். இந்தியாவை உலகின் வாகனத்துறை மையமாக மாற்றுவதும் அவரது கனவாகும். இவ்வாறு கட்கரி பேசினார்.
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |