நரேந்திரமோடி என்றைக்குமே தனது சுயத்தை மறைத்ததில்லை

பிரதமர் நரேந்திரமோடி என்றைக்குமே தனது சுயத்தை மறைத்ததில்லை. அவருடைய இந்தப்பண்பை நான் பாராட்டுகிறேன் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் பேசியுள்ளார்.

ஜம்முகாஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட குலாம் நபி ஆசாத் இவ்வாறு பேசினார்.

முன்னதாக சனிக் கிழமையன்று ஜி-23 என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஜம்மு-காஷ்மீரில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைமை குறித்து பல்வேறு கேள்விகளை அவர்கள் எழுப்பினர். இந்நிலையில், குலாம்நபி ஆசாத்தின் பேச்சு அதீத முக்கியத்துவம் பெறுகிறது.

அவர் பேசியதாவது:

“நம் தேசத்தின் தலைவர்கள் பலரிடம் பலநல்ல விஷயங்களை நான் கண்டு ரசித்திருக்கிறேன். சிலவற்றை பின்பற்றியிருக்கிறேன். நான் ஒருகிராமத்தைச் சேர்ந்தவர். அதில் எனக்கு எப்போதுமே பெருமை. அதேபோல், நமது பிரதமர் மோடி போன்றோரை நான் என்றைக்குமே பெருமையுடன் பார்க்கிறேன். ஒருகிராமத்தில் தேநீர் விற்றுக் கொண்டிருந்தவர் பிரதமரானார். ஆனால் அவர் அதை என்றுமே மறைத்ததில்லை. நாங்கள் அரசியல் சித்தாந்த ரீதியாக எதிரிகளாக இருக்கலாம்.

ஆனால், அவரது சுயத்தை மறைக்காத பண்பை நான்வெகுவாக பாராட்டுகிறேன். ஆனால், சில அரசியல்வாதிகள் மாயையில் வாழ்கின்றனர். ஒருமனிதர் எபோதும் அவரது சுயத்தை சிலாகிக்க வேண்டும். நான் பலநாடுகளுக்கு பயனப் பட்டிருக்கிறேன். 5 நட்சத்திர, 7 நட்சத்திர விடுதிகளில் தங்கியிருக்கிறேன். ஆனால், என் சொந்த கிராமத்தில் என் மக்களுடன் நான் இருக்கும் போது தனித்துவமாக உணர்கிறேன்” எனப் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...