ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் குறித்து ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் கூறுகிறது பிரதமர் மோடி பேச்சு

” ஒரே பதவி, ஒரே பென்சன் திட்டம் குறித்து ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் சொன்னது,” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஜம்முவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சியால் மக்கள் சோர்வடைந்து விட்டனர். அவர்கள் ஆட்சியில் நிலவிய ஊழல், வேலைவாய்ப்பில் பாகுபாடு ஆகியன தொடர்வதை மக்கள் விரும்பவில்லை. இனியும் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் நிலவுவதையும் அவர்கள் விரும்பவில்லை. அமைதி, குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலம் ஆகியவற்றை விரும்புகின்றனர். இதற்காக பா.ஜ., ஆட்சி வர வேண்டும் என காஷ்மீர் மக்கள் விரும்புகின்றனர்.

கடந்த இரு கட்ட தேர்தலில் பதிவான ஓட்டுகள் மக்களின் மனநிலையை காட்டுகின்றன. அதில் பா.ஜ.,வுக்கு ஆதரவாக அதிக ஓட்டுகள் பதிவாகி உள்ளது. முழு மெஜாரிட்டியுடன் பா.ஜ., ஆட்சி அமைக்கும்.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை ஒரு போதும் காங்கிரஸ் மதித்தது கிடையாது. அக்கட்சி தான், ஒரே பதவி ஒரே பென்சன் திட்டத்திற்காக ராணுவ வீரர்களை நான்கு தசாப்தங்களாக காக்க வைத்தது. இத்திட்டத்தால், அரசு கருவூலம் காலியாகும் என ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் சொன்னது. ஆனால், நான் ராணுவ வீரர்களின் குடும்பங்களின் நலனை விட அரசு கருவூலத்தை நான் பெரிதாக பார்க்கவில்லை.

குண்டு சத்தம் கேட்ட போது எல்லாம் காங்கிரஸ் வெள்ளை கொடி காட்டியதை மறக்கக்கூடாது. துப்பாக்கிகளுக்கு குண்டுகள் மூலம் பா.ஜ., ஆட்சியில் பதிலடி கொடுக்கப்பட்ட போது தான், எதிர்புறத்தில் இருந்தவர்களுக்கு உணர்வு வந்தது. 2016 ம் ஆண்டு செப்.,28 அன்று தான் இந்தியா சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...