ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் குறித்து ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் கூறுகிறது பிரதமர் மோடி பேச்சு

” ஒரே பதவி, ஒரே பென்சன் திட்டம் குறித்து ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் சொன்னது,” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஜம்முவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சியால் மக்கள் சோர்வடைந்து விட்டனர். அவர்கள் ஆட்சியில் நிலவிய ஊழல், வேலைவாய்ப்பில் பாகுபாடு ஆகியன தொடர்வதை மக்கள் விரும்பவில்லை. இனியும் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் நிலவுவதையும் அவர்கள் விரும்பவில்லை. அமைதி, குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலம் ஆகியவற்றை விரும்புகின்றனர். இதற்காக பா.ஜ., ஆட்சி வர வேண்டும் என காஷ்மீர் மக்கள் விரும்புகின்றனர்.

கடந்த இரு கட்ட தேர்தலில் பதிவான ஓட்டுகள் மக்களின் மனநிலையை காட்டுகின்றன. அதில் பா.ஜ.,வுக்கு ஆதரவாக அதிக ஓட்டுகள் பதிவாகி உள்ளது. முழு மெஜாரிட்டியுடன் பா.ஜ., ஆட்சி அமைக்கும்.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை ஒரு போதும் காங்கிரஸ் மதித்தது கிடையாது. அக்கட்சி தான், ஒரே பதவி ஒரே பென்சன் திட்டத்திற்காக ராணுவ வீரர்களை நான்கு தசாப்தங்களாக காக்க வைத்தது. இத்திட்டத்தால், அரசு கருவூலம் காலியாகும் என ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் சொன்னது. ஆனால், நான் ராணுவ வீரர்களின் குடும்பங்களின் நலனை விட அரசு கருவூலத்தை நான் பெரிதாக பார்க்கவில்லை.

குண்டு சத்தம் கேட்ட போது எல்லாம் காங்கிரஸ் வெள்ளை கொடி காட்டியதை மறக்கக்கூடாது. துப்பாக்கிகளுக்கு குண்டுகள் மூலம் பா.ஜ., ஆட்சியில் பதிலடி கொடுக்கப்பட்ட போது தான், எதிர்புறத்தில் இருந்தவர்களுக்கு உணர்வு வந்தது. 2016 ம் ஆண்டு செப்.,28 அன்று தான் இந்தியா சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் என்கவுன்டர்களை கு ...

தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும் L. முருகன் கருத்து 'தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும். துப்பாக்கியை வைத்து சட்டம் ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலை ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சாதனை ஸ்காட்லாந்தில் பென் நெவிஸ் சிகரம் மீதேறி பா.ஜ., மாநில ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் கு ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் குறித்து ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் கூறுகிறது பிரதமர் மோடி பேச்சு '' ஒரே பதவி, ஒரே பென்சன் திட்டம் குறித்து ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களி ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம் கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அர ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா 'காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,' என ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து  ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை ...

மருத்துவ செய்திகள்

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...