நாகர்கோவில் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு ஆகிய 3 தொகுதிகள் பாஜக வுக்கு ஒதுக்கப் பட்டுள்ளன. இதில் நாகர்கோவில், குளச்சல் தொகுதிகளுக்கு நேற்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். நாகர்கோவில் தொகுதிக்கு பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேல் அரசியல் அனுபவம்பெற்றவர். திருமணமாகவில்லை. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ சுரேஷ்ராஜனை எதிர்த்து போட்டியிட்டார். அந்ததேர்தலில் பாஜக தனித்து நின்று 46,413 வாக்குகள் பெற்றிருந்தார். தற்போது பாஜக மாநில துணைத்தலைவராக உள்ளார்.

குளச்சல் தொகுதியில் பாஜக வேட்பாளராக குமரிரமேஷ் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் கடந்ததேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரின்ஸை எதிர்த்து இதேதொகுதியில் போட்டியிட்டு 41,169 வாக்குகள் பெற்றிருந்தார். சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பில் மரணமடைந்த குமரி பாலனின் சகோதரரான இவர், தக்கலை அருகே உள்ள பிரமபுரத்தை சேர்ந்தவர். பாஜகவின் விளவங்கோடு தொகுதிவேட்பாளர் பெயர் அடுத்தகட்ட பட்டியலில் வெளி யாகவுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...