கிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்

‘நாட்டின் கிழக்கு பகுதி யின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த பகுதியின் வளர்ச்சிக்கு, கோல்கட்டா தலைமை வகிக்கும்,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஒடிசா மாநிலத்தின் முதல் முதல்வர் ஹரே கிருஷ்ண மஹதாப், எழுதிய, ‘ஓடிசா இதிஹாஸ்’ என்ற புத்தகத்தின் ஹிந்தி மொழியாக்க பதிப்பை, பிரதமர் மோடி, வெளியிட்டார். ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக நடந்த இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:

நம் நாட்டில், இயற்கை வளங்கள் நிறைந்த பகுதி எது என்றால், அது கிழக்கு பகுதி தான், மேற்கு வங்கம், அசாம் ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தான், இயற்கை மற்றும் மனித வளங்கள் அதிகமாக உள்ளன. கிழக்கு பகுதி தலைமை வகித்த போது தான், பாரதத்தின் பொற்காலமாக இருந்தது என்பது வரலாற்றுப் பூர்வமான உண்மை.

ஆனால், தற்போது வளர்ச்சியில் கிழக்கு பகுதி பின் தங்கியுள்ளது. மேற்கு பகுதிக்கு இணையாக, கிழக்கு பகுதியிலும் வளர்ச்சி ஏற்படுத்த, மத்திய அரசு அதிக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, தொழில்வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு, துடிப்பான கோல்கட்டா தலைமை வகிக்கும். அதற்கான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. ஓடிசாவின் முதல் காங்கிரஸ் முதல்வராக பதவியேற்ற மஹதாப், அதே கட்சியை எதிர்த்து, 1975ல், ஜனநாயகத்தை காக்க போராடினார். இவ்வாறு அவர் பேசினார்.

One response to “கிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...