கிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்

‘நாட்டின் கிழக்கு பகுதி யின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த பகுதியின் வளர்ச்சிக்கு, கோல்கட்டா தலைமை வகிக்கும்,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஒடிசா மாநிலத்தின் முதல் முதல்வர் ஹரே கிருஷ்ண மஹதாப், எழுதிய, ‘ஓடிசா இதிஹாஸ்’ என்ற புத்தகத்தின் ஹிந்தி மொழியாக்க பதிப்பை, பிரதமர் மோடி, வெளியிட்டார். ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக நடந்த இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:

நம் நாட்டில், இயற்கை வளங்கள் நிறைந்த பகுதி எது என்றால், அது கிழக்கு பகுதி தான், மேற்கு வங்கம், அசாம் ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தான், இயற்கை மற்றும் மனித வளங்கள் அதிகமாக உள்ளன. கிழக்கு பகுதி தலைமை வகித்த போது தான், பாரதத்தின் பொற்காலமாக இருந்தது என்பது வரலாற்றுப் பூர்வமான உண்மை.

ஆனால், தற்போது வளர்ச்சியில் கிழக்கு பகுதி பின் தங்கியுள்ளது. மேற்கு பகுதிக்கு இணையாக, கிழக்கு பகுதியிலும் வளர்ச்சி ஏற்படுத்த, மத்திய அரசு அதிக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, தொழில்வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு, துடிப்பான கோல்கட்டா தலைமை வகிக்கும். அதற்கான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. ஓடிசாவின் முதல் காங்கிரஸ் முதல்வராக பதவியேற்ற மஹதாப், அதே கட்சியை எதிர்த்து, 1975ல், ஜனநாயகத்தை காக்க போராடினார். இவ்வாறு அவர் பேசினார்.

One response to “கிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...