நாட்டின் வளர்ச்சியில் அசாம் பங்கு மகத்தானது – பிரதமர் மோடி

“நம் நாட்டின் வெற்றி சரித்திரத்தில் அசாம் முக்கிய பங்காற்றி உள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலமான அசாமில், ‘அட்வான்டேஜ் அசாம் 2.0’ என்ற முதலீட்டு மற்றும் உட்கட்டமைப்பு மாநாட்டை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

உலகளாவிய ஸ்திரத்தன்மை இல்லாத நிலையிலும், இந்தியா வேகமாக வளர்கிறது என்பதை நிபுணர்கள் ஒருமனதாக ஒப்புக்கொள்கின்றனர்.

இந்த நுாற்றாண்டின் அடுத்த 25 ஆண்டுகளை இலக்காக வைத்து, நாம் உழைத்துக் கொண்டிருக்கிறோம். நம் இளைஞர்கள் புதுமைகளை படைப்பவர்களாகவும், திறன் கொண்டவர்களாகவும் உள்ளனர். அவர்கள் மேல் இந்த உலகமே அதிக நம்பிக்கை வைத்துள்ளது.

நம் உள்ளூர் வினியோகத் தொடரை வலுப்படுத்தி பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வர்த்த ஒப்பந்தம் போட்டு வருகிறோம். கிழக்கு ஆசியாவுடனான நம் வலுவான தொடர்பும், புதிதாகத் திறக்கப்பட்ட, இந்தியா- – மத்திய கிழக்கு – -ஐரோப்பா பொருளாதார வழித்தடமும் புதிய வாய்ப்புகளை அளிக்கின்றன.

நம் நாட்டின் வளர்ச்சியில் அசாமின் பங்கு அதிகரித்து வருகிறது. தற்போது, 6 லட்சம் கோடி ரூபாய் வரை பொருளாதாரத்தை உயர்த்தி உள்ளது.

கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சிறந்த முதலீட்டுக்கான சூழலில் அசாம் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

கடந்த 2009 – 14 வரை, அசாம் ரயில்வே பட்ஜெட் ஆண்டுக்கு சராசரியாக, 2,100 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது அது 10,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின், 60 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. குவஹாத்தி – ஜல்பாய்குரி இடையே முதன்முறையாக மிதமான விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவின்போது, அசாம் அரசு சார்பில் மாநிலத்தின் பாரம்பரிய உடையும், அங்குள்ள காமாக்யா கோவிலின் மாதிரி வடிவிலான நினைவுப் பரிசையும், பிரதமர் மோடிக்கு முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அளித்தார்.

அசாம் மாநில அரசின் விலங்காக திகழும் ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தின் தோற்றத்துடன், செமிகண்டக்டர் சிப்களில் உருவாக்கப்பட்ட சிலையையும் பிரதமர் மோடிக்கு அவர் வழங்கினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...