நாட்டின் வளர்ச்சியில் அசாம் பங்கு மகத்தானது – பிரதமர் மோடி

“நம் நாட்டின் வெற்றி சரித்திரத்தில் அசாம் முக்கிய பங்காற்றி உள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலமான அசாமில், ‘அட்வான்டேஜ் அசாம் 2.0’ என்ற முதலீட்டு மற்றும் உட்கட்டமைப்பு மாநாட்டை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

உலகளாவிய ஸ்திரத்தன்மை இல்லாத நிலையிலும், இந்தியா வேகமாக வளர்கிறது என்பதை நிபுணர்கள் ஒருமனதாக ஒப்புக்கொள்கின்றனர்.

இந்த நுாற்றாண்டின் அடுத்த 25 ஆண்டுகளை இலக்காக வைத்து, நாம் உழைத்துக் கொண்டிருக்கிறோம். நம் இளைஞர்கள் புதுமைகளை படைப்பவர்களாகவும், திறன் கொண்டவர்களாகவும் உள்ளனர். அவர்கள் மேல் இந்த உலகமே அதிக நம்பிக்கை வைத்துள்ளது.

நம் உள்ளூர் வினியோகத் தொடரை வலுப்படுத்தி பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வர்த்த ஒப்பந்தம் போட்டு வருகிறோம். கிழக்கு ஆசியாவுடனான நம் வலுவான தொடர்பும், புதிதாகத் திறக்கப்பட்ட, இந்தியா- – மத்திய கிழக்கு – -ஐரோப்பா பொருளாதார வழித்தடமும் புதிய வாய்ப்புகளை அளிக்கின்றன.

நம் நாட்டின் வளர்ச்சியில் அசாமின் பங்கு அதிகரித்து வருகிறது. தற்போது, 6 லட்சம் கோடி ரூபாய் வரை பொருளாதாரத்தை உயர்த்தி உள்ளது.

கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சிறந்த முதலீட்டுக்கான சூழலில் அசாம் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

கடந்த 2009 – 14 வரை, அசாம் ரயில்வே பட்ஜெட் ஆண்டுக்கு சராசரியாக, 2,100 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது அது 10,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின், 60 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. குவஹாத்தி – ஜல்பாய்குரி இடையே முதன்முறையாக மிதமான விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவின்போது, அசாம் அரசு சார்பில் மாநிலத்தின் பாரம்பரிய உடையும், அங்குள்ள காமாக்யா கோவிலின் மாதிரி வடிவிலான நினைவுப் பரிசையும், பிரதமர் மோடிக்கு முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அளித்தார்.

அசாம் மாநில அரசின் விலங்காக திகழும் ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தின் தோற்றத்துடன், செமிகண்டக்டர் சிப்களில் உருவாக்கப்பட்ட சிலையையும் பிரதமர் மோடிக்கு அவர் வழங்கினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட்� ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட்டம் – அண்ணாமலை 'சென்னை டாஸ்மாக் அலுவலகத்தை, முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்' என, ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்தி� ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்திற்கு 8,600 கோடி நிதி – அஷ்வினி வைஷ்ணவ் கிரியேட் இன் இந்தியா திட்டத்திற்கு ரூ.8,600 கோடி நிதி ...

பட்ஜெட்டில் ரூபாய் குறியீடு மா� ...

பட்ஜெட்டில் ரூபாய் குறியீடு மாற்றம் – அண்ணாமலை எதிர்ப்பு நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் தொடர்பான முன்னோட்ட ...

பிரிவினைவாத உணர்வை பரப்பும் ஆப� ...

பிரிவினைவாத உணர்வை பரப்பும் ஆபத்தான மனநிலை – நிர்மலா சீதாராமன் ரூபாய் குறியீடு மாற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் ...

உ.பி -யில் நடப்பட்டுள்ள 210 கோடி மர ...

உ.பி -யில் நடப்பட்டுள்ள 210 கோடி மரங்கள் – முதல்வர் யோகி ஆதித்யநாத் நாத் பெருமிதம் கடந்த 8 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 210 கோடி ...

வெற்றிலைரமாக பிரிக்கப்பட்ட ஸ்� ...

வெற்றிலைரமாக பிரிக்கப்பட்ட ஸ்பேடெக்ஸ் விண்கலங்கள் – இஸ்ரோ 'ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் விண்ணில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன. இது தொடர்பாக ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...