நாட்டின் வளர்ச்சியில் அசாம் பங்கு மகத்தானது – பிரதமர் மோடி

“நம் நாட்டின் வெற்றி சரித்திரத்தில் அசாம் முக்கிய பங்காற்றி உள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலமான அசாமில், ‘அட்வான்டேஜ் அசாம் 2.0’ என்ற முதலீட்டு மற்றும் உட்கட்டமைப்பு மாநாட்டை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

உலகளாவிய ஸ்திரத்தன்மை இல்லாத நிலையிலும், இந்தியா வேகமாக வளர்கிறது என்பதை நிபுணர்கள் ஒருமனதாக ஒப்புக்கொள்கின்றனர்.

இந்த நுாற்றாண்டின் அடுத்த 25 ஆண்டுகளை இலக்காக வைத்து, நாம் உழைத்துக் கொண்டிருக்கிறோம். நம் இளைஞர்கள் புதுமைகளை படைப்பவர்களாகவும், திறன் கொண்டவர்களாகவும் உள்ளனர். அவர்கள் மேல் இந்த உலகமே அதிக நம்பிக்கை வைத்துள்ளது.

நம் உள்ளூர் வினியோகத் தொடரை வலுப்படுத்தி பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வர்த்த ஒப்பந்தம் போட்டு வருகிறோம். கிழக்கு ஆசியாவுடனான நம் வலுவான தொடர்பும், புதிதாகத் திறக்கப்பட்ட, இந்தியா- – மத்திய கிழக்கு – -ஐரோப்பா பொருளாதார வழித்தடமும் புதிய வாய்ப்புகளை அளிக்கின்றன.

நம் நாட்டின் வளர்ச்சியில் அசாமின் பங்கு அதிகரித்து வருகிறது. தற்போது, 6 லட்சம் கோடி ரூபாய் வரை பொருளாதாரத்தை உயர்த்தி உள்ளது.

கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சிறந்த முதலீட்டுக்கான சூழலில் அசாம் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

கடந்த 2009 – 14 வரை, அசாம் ரயில்வே பட்ஜெட் ஆண்டுக்கு சராசரியாக, 2,100 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது அது 10,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின், 60 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. குவஹாத்தி – ஜல்பாய்குரி இடையே முதன்முறையாக மிதமான விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவின்போது, அசாம் அரசு சார்பில் மாநிலத்தின் பாரம்பரிய உடையும், அங்குள்ள காமாக்யா கோவிலின் மாதிரி வடிவிலான நினைவுப் பரிசையும், பிரதமர் மோடிக்கு முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அளித்தார்.

அசாம் மாநில அரசின் விலங்காக திகழும் ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தின் தோற்றத்துடன், செமிகண்டக்டர் சிப்களில் உருவாக்கப்பட்ட சிலையையும் பிரதமர் மோடிக்கு அவர் வழங்கினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.