மக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும்

தேர்தல் பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கு எதிராக மக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும் என்று மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளார்.

மேற்கு வங்கமாநிலத்தில் 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது கூச்பிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் திடீரென வன்முறை மூண்டதால் சி.ஐ.எஸ்.எஃப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.

இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உள்ளூர்மக்கள் மத்திய தொழில்பாதுகாப்பு படையினரை (சி.ஐ.எஸ்.எஃப்) தாக்கியதால், சிஐஎஸ்எஃப் படையினர் வேறுவழியின்றி வன் முறையில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

சி.ஐ.எஸ்.எஃப் படையினர் மத்திய அரசின்சொல் கேட்டு மக்களை சுட்டதாகவும், இதற்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலகவேண்டும் என்றும் மம்தா பானர்ஜி கூறினார் இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கு எதிராக மக்களைத் தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத் தொடர வேண்டும் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘ தூசு செலே’ (கெட்ட பையன்கள்) எங்கிருந்து வந்தார்கள்?இவர்கள் வங்காளத்தில் தொடர்ந்து இருக்கமாட்டார்கள். இது ஒரு ஆரம்பம் மட்டுமே. சிஐஎஸ்எஃப் துப்பாக்கிகளை நிகழ்ச்சிக்காக மட்டுமே எடுத்துச்செல்கிறது என்று தவறாக நினைக்கிறார்கள்.யாராவது சட்டத்தை தனதுகைகளில் எடுத்துக் கொண்டால், அவருக்கு பொருத்தமான பதில்கிடைக்கும். மத்திய படைகள் வாக்குச்சாவடிகளில் நிறுத்தப்படும், அவர்களை அச்சுறுத்த யாரும் அனுமதிக்கப் பட மாட்டார்கள். இன்னும் பல்வேறு இடங்களில் கூச்பிகார் போன்ற சம்பவங்கள் அதிகமாக நடக்கும். எனவே எச்சரிக்கையாக இருங்கள் என்று திலீப்கோஷ் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப் ...

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப்பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல், நில உரிமையின் நிர்வாகத்தை ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வின ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வினா குடிமக்களுக்கு நல்ல வாய்ப்பு இந்திய விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய சாதனையாக,சந்திரயான் -3 ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று கு ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 28 அன்று ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

மருத்துவ செய்திகள்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.