மக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும்

தேர்தல் பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கு எதிராக மக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும் என்று மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளார்.

மேற்கு வங்கமாநிலத்தில் 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது கூச்பிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் திடீரென வன்முறை மூண்டதால் சி.ஐ.எஸ்.எஃப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.

இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உள்ளூர்மக்கள் மத்திய தொழில்பாதுகாப்பு படையினரை (சி.ஐ.எஸ்.எஃப்) தாக்கியதால், சிஐஎஸ்எஃப் படையினர் வேறுவழியின்றி வன் முறையில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

சி.ஐ.எஸ்.எஃப் படையினர் மத்திய அரசின்சொல் கேட்டு மக்களை சுட்டதாகவும், இதற்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலகவேண்டும் என்றும் மம்தா பானர்ஜி கூறினார் இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கு எதிராக மக்களைத் தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத் தொடர வேண்டும் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘ தூசு செலே’ (கெட்ட பையன்கள்) எங்கிருந்து வந்தார்கள்?இவர்கள் வங்காளத்தில் தொடர்ந்து இருக்கமாட்டார்கள். இது ஒரு ஆரம்பம் மட்டுமே. சிஐஎஸ்எஃப் துப்பாக்கிகளை நிகழ்ச்சிக்காக மட்டுமே எடுத்துச்செல்கிறது என்று தவறாக நினைக்கிறார்கள்.யாராவது சட்டத்தை தனதுகைகளில் எடுத்துக் கொண்டால், அவருக்கு பொருத்தமான பதில்கிடைக்கும். மத்திய படைகள் வாக்குச்சாவடிகளில் நிறுத்தப்படும், அவர்களை அச்சுறுத்த யாரும் அனுமதிக்கப் பட மாட்டார்கள். இன்னும் பல்வேறு இடங்களில் கூச்பிகார் போன்ற சம்பவங்கள் அதிகமாக நடக்கும். எனவே எச்சரிக்கையாக இருங்கள் என்று திலீப்கோஷ் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...