கொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாகமட்டும் இருக்க வேண்டும் -பிரதமர் மோடி வேண்டுகோள்

உத்தரகாண்டின் ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்பமேளா திருவிழா, கொரோனா பரப்பும் மையமாகமாறி வருகிறது. 670 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்துகிடக்கும் கும்பமேளா தலங்களில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

கும்பமேளாவுக்கு வந்தவர்களிடையே நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் முதல்கட்டமாக 2,171 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனாவால் மத்தியப்பிரதேச மகா நிர்வானி அகாராவின் தலைவர் சுவாமி கபில் தேவ் கடந்த 13ம் தேதி உயிரிழந்தார்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஒருடுவீட்டில், ஜுனா அகாராவின் சுவாமி அவ்தேஷானந்த் கிரியிடம் தொலை பேசியில் பேசியதாகவும், இரண்டு ஷாஹி ஸ்னான்” (புனித குளியல்) நடந்திருப்பதாகவும், இந்த ஆண்டு கும்பமேளா நாடுநடத்தும் கொரோனாவுக்கு எதிரான போரின் அடையாளமாக இருக்கவேண்டும் என்றும் நான் வேண்டுகோள் விடுத்தேன்.” என்று பிரதமர் மோடி இந்தியில் டுவீட் செய்துள்ளார்.

அதாவது அடையாளம் என்றவகையில் மட்டும் கும்பமேளாவை கொண்டாடுங்கள் என்பது மோடி கோரிக்கையாகும். பிரதமர் மோடியின் டுவீட்டுக்கு பதிலளித்த சுவாமி அவ்தேஷானந்த்: “பிரதமர் மோடியின் வேண்டுகோளை நாங்கள்மதிக்கிறோம். உயிர்களைக் காப்பாற்றுவது புனிதமானது.

அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் பின்பற்றவேண்டும் என்று சாதுக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

‘நிரஞ்சனி அகாடா’ என்ற அமைப்பு, கும்பமேளாவை இன்றுடன் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. இதனால், கும்பமேளா இன்றுடன் முடித்துக் கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...