கொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாகமட்டும் இருக்க வேண்டும் -பிரதமர் மோடி வேண்டுகோள்

உத்தரகாண்டின் ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்பமேளா திருவிழா, கொரோனா பரப்பும் மையமாகமாறி வருகிறது. 670 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்துகிடக்கும் கும்பமேளா தலங்களில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

கும்பமேளாவுக்கு வந்தவர்களிடையே நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் முதல்கட்டமாக 2,171 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனாவால் மத்தியப்பிரதேச மகா நிர்வானி அகாராவின் தலைவர் சுவாமி கபில் தேவ் கடந்த 13ம் தேதி உயிரிழந்தார்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஒருடுவீட்டில், ஜுனா அகாராவின் சுவாமி அவ்தேஷானந்த் கிரியிடம் தொலை பேசியில் பேசியதாகவும், இரண்டு ஷாஹி ஸ்னான்” (புனித குளியல்) நடந்திருப்பதாகவும், இந்த ஆண்டு கும்பமேளா நாடுநடத்தும் கொரோனாவுக்கு எதிரான போரின் அடையாளமாக இருக்கவேண்டும் என்றும் நான் வேண்டுகோள் விடுத்தேன்.” என்று பிரதமர் மோடி இந்தியில் டுவீட் செய்துள்ளார்.

அதாவது அடையாளம் என்றவகையில் மட்டும் கும்பமேளாவை கொண்டாடுங்கள் என்பது மோடி கோரிக்கையாகும். பிரதமர் மோடியின் டுவீட்டுக்கு பதிலளித்த சுவாமி அவ்தேஷானந்த்: “பிரதமர் மோடியின் வேண்டுகோளை நாங்கள்மதிக்கிறோம். உயிர்களைக் காப்பாற்றுவது புனிதமானது.

அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் பின்பற்றவேண்டும் என்று சாதுக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

‘நிரஞ்சனி அகாடா’ என்ற அமைப்பு, கும்பமேளாவை இன்றுடன் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. இதனால், கும்பமேளா இன்றுடன் முடித்துக் கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.