உத்தரகாண்டின் ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்பமேளா திருவிழா, கொரோனா பரப்பும் மையமாகமாறி வருகிறது. 670 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்துகிடக்கும் கும்பமேளா தலங்களில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
கும்பமேளாவுக்கு வந்தவர்களிடையே நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் முதல்கட்டமாக 2,171 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கொரோனாவால் மத்தியப்பிரதேச மகா நிர்வானி அகாராவின் தலைவர் சுவாமி கபில் தேவ் கடந்த 13ம் தேதி உயிரிழந்தார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஒருடுவீட்டில், ஜுனா அகாராவின் சுவாமி அவ்தேஷானந்த் கிரியிடம் தொலை பேசியில் பேசியதாகவும், இரண்டு ஷாஹி ஸ்னான்” (புனித குளியல்) நடந்திருப்பதாகவும், இந்த ஆண்டு கும்பமேளா நாடுநடத்தும் கொரோனாவுக்கு எதிரான போரின் அடையாளமாக இருக்கவேண்டும் என்றும் நான் வேண்டுகோள் விடுத்தேன்.” என்று பிரதமர் மோடி இந்தியில் டுவீட் செய்துள்ளார்.
அதாவது அடையாளம் என்றவகையில் மட்டும் கும்பமேளாவை கொண்டாடுங்கள் என்பது மோடி கோரிக்கையாகும். பிரதமர் மோடியின் டுவீட்டுக்கு பதிலளித்த சுவாமி அவ்தேஷானந்த்: “பிரதமர் மோடியின் வேண்டுகோளை நாங்கள்மதிக்கிறோம். உயிர்களைக் காப்பாற்றுவது புனிதமானது.
அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் பின்பற்றவேண்டும் என்று சாதுக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
‘நிரஞ்சனி அகாடா’ என்ற அமைப்பு, கும்பமேளாவை இன்றுடன் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. இதனால், கும்பமேளா இன்றுடன் முடித்துக் கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |