மேற்குவங்கம் மாற்றம் காணும் பிரச்சாரங்கள்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல்கள் 8 கட்டங்களாக நடந்துவருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், கொரோனா இரண்டாவது அலை தொடங்கியுள்ளதன காரணமாக, மேற்குவங்க தேர்தல் பிரச்சாரங்களில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவல் ( Corona Virus) எதிரொலியாக, காங்கிரஸ் கட்சியின் சார்ப்பாக பிரச்சாரம்செய்த அதன் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி (Rahul Gandhi), தனது தேர்தல் பிரச்சாரத்தை ரத்துசெய்தார். மற்ற தலைவர்களும் அவ்வாறே செய்யவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதியானது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தங்கள் தேர்தல்பிரச்சாரத்தை ரத்து செய்வதாக இடதுசாரி கட்சித் தலைவர்களும் அறிவித்தனர். மேற்குவங்கத்தின் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், தனது பிரச்சார உத்தியை மாற்றி அமைத்துள்ளது. பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களுக்கு பதிலாக சிறியளவிலான கூட்டங்களை நடத்தப்போவதாக அக்கட்சி தலைவர், முதல்வர் மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார்.

இதை அடுத்து பாஜகவும் தேர்தல்பிரச்சார உத்தியை மாற்றி அமைத்துள்ளது. மீதமுள்ள 3 கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தை, பிரம்மாணடமான அளவில் இல்லாமல், சிறியளவில், அதாவது சுமார் 500 முதல் 1000 பேருக்கு அதிகமான அளவில் இல்லாமல் மக்கள்கூடும் வகையில் நடத்த பாஜக முடிவு செய்துள்ளது. இதுவரை, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்த பிரதமர் மோடி (PM Narendra Modi) , உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கூட்டங்களிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதனிடையே, மேற்குவங்கத்தில் மீதமுள்ள மூன்றுகட்ட வாக்குபதிவினை, ஒரேநாளில் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் மம்தாபேனர்ஜீ விடுத்த கோரிக்கை பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், அது சாத்திய மில்லை என கூறியுள்ளது.

நேற்று கொரோனாபரவல் தொடர்பாக மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, “நமது கடமைகளை சரியாகசெய்து, தடுப்பூசி செயல்முறையை வெற்றியடையச் செய்ய வேண்டும். அனைவரும், பாதுகாப்பாக இருங்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து, கொரோனா தொற்றுபரவலை தடுக்கவும், தொற்றுக்கு எதிரான போரில் வெற்றிபெறவும் அனைவரின் உதவியும் நாட்டுக்குத் தேவை” என குறிப்பிட்டார்.

மேலும், “சென்ற ஆண்டு நமக்கு இந்ததொற்று புதியதாக இருந்தது. அப்போது நம்மிடம் இதை எதிர்த்துபோராட் ஒரு ஆயுதமும் இல்லை. இப்போது, நம்மிடம் இதற்கான மருந்துள்ளது, தடுப்பூசிகள் உள்ளன, வழிமுறைகள் உள்ளன. ஆகையால் மக்கள் அச்சப்பட தேவையில்லை.” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப் ...

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப்பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல், நில உரிமையின் நிர்வாகத்தை ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வின ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வினா குடிமக்களுக்கு நல்ல வாய்ப்பு இந்திய விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய சாதனையாக,சந்திரயான் -3 ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று கு ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 28 அன்று ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...