மேற்குவங்கம் மாற்றம் காணும் பிரச்சாரங்கள்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல்கள் 8 கட்டங்களாக நடந்துவருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், கொரோனா இரண்டாவது அலை தொடங்கியுள்ளதன காரணமாக, மேற்குவங்க தேர்தல் பிரச்சாரங்களில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவல் ( Corona Virus) எதிரொலியாக, காங்கிரஸ் கட்சியின் சார்ப்பாக பிரச்சாரம்செய்த அதன் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி (Rahul Gandhi), தனது தேர்தல் பிரச்சாரத்தை ரத்துசெய்தார். மற்ற தலைவர்களும் அவ்வாறே செய்யவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதியானது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தங்கள் தேர்தல்பிரச்சாரத்தை ரத்து செய்வதாக இடதுசாரி கட்சித் தலைவர்களும் அறிவித்தனர். மேற்குவங்கத்தின் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், தனது பிரச்சார உத்தியை மாற்றி அமைத்துள்ளது. பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களுக்கு பதிலாக சிறியளவிலான கூட்டங்களை நடத்தப்போவதாக அக்கட்சி தலைவர், முதல்வர் மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார்.

இதை அடுத்து பாஜகவும் தேர்தல்பிரச்சார உத்தியை மாற்றி அமைத்துள்ளது. மீதமுள்ள 3 கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தை, பிரம்மாணடமான அளவில் இல்லாமல், சிறியளவில், அதாவது சுமார் 500 முதல் 1000 பேருக்கு அதிகமான அளவில் இல்லாமல் மக்கள்கூடும் வகையில் நடத்த பாஜக முடிவு செய்துள்ளது. இதுவரை, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்த பிரதமர் மோடி (PM Narendra Modi) , உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கூட்டங்களிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதனிடையே, மேற்குவங்கத்தில் மீதமுள்ள மூன்றுகட்ட வாக்குபதிவினை, ஒரேநாளில் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் மம்தாபேனர்ஜீ விடுத்த கோரிக்கை பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், அது சாத்திய மில்லை என கூறியுள்ளது.

நேற்று கொரோனாபரவல் தொடர்பாக மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, “நமது கடமைகளை சரியாகசெய்து, தடுப்பூசி செயல்முறையை வெற்றியடையச் செய்ய வேண்டும். அனைவரும், பாதுகாப்பாக இருங்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து, கொரோனா தொற்றுபரவலை தடுக்கவும், தொற்றுக்கு எதிரான போரில் வெற்றிபெறவும் அனைவரின் உதவியும் நாட்டுக்குத் தேவை” என குறிப்பிட்டார்.

மேலும், “சென்ற ஆண்டு நமக்கு இந்ததொற்று புதியதாக இருந்தது. அப்போது நம்மிடம் இதை எதிர்த்துபோராட் ஒரு ஆயுதமும் இல்லை. இப்போது, நம்மிடம் இதற்கான மருந்துள்ளது, தடுப்பூசிகள் உள்ளன, வழிமுறைகள் உள்ளன. ஆகையால் மக்கள் அச்சப்பட தேவையில்லை.” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...