சட்டப்பேரவை பாஜக குழுத்தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு .

சட்டப்பேரவை பாஜக குழுத்தலைவராக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, நாகர்கோவில், திருநெல்வேலி, கோவைதெற்கு, மொடக்குறிச்சி ஆகிய 4 இடங்களில் வென்றது. இதன்மூலம் 2001-க்கு பிறகு தமிழக சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் இடம் பெறுகின்றனர்.

இந்நிலையில், பேரவைத்தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்றுமாலை நடைபெற்றது.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன், தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மேலிட பார்வையாளரான மத்திய உள்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் நடந்த இக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் (திருநெல்வேலி), வானதி சீனிவாசன் (கோவை தெற்கு), எம்.ஆர்.காந்தி (நாகர்கோவில்), சி.கே.சரஸ்வதி (மொடக்குறிச்சி) ஆகிய 4 எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “தமிழகத்தில் பாஜக காலூன்றவேமுடியாது என்றனர். இப்போது 4 தாமரைகள் மலர்ந்து விட்டன. தமிழக சட்டப்பேரவையில் ஆக்கப் பூர்வமான எதிர்க்கட்சியாக பாஜக செயல்படும். பாஜகவின் 4 எம்எல்ஏக்களும் 4 தூண்களாக இருப்பார்கள். அரசுக்கு ஆலோசனை வழங்குவதோடு, அரசின் தவறுகளை பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் சுட்டிக் காட்டுவார்கள்’’ என்றார்.

இதற்கிடையில், சட்டப்பேரவை பாஜக குழுத்தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

நயினார் நாகேந்திரன் 2001, 2011 சட்டப்பேரவை தேர்தல்களில் திருநெல்வேலி தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2001 முதல் 2006 வரை ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குபிறகு கடந்த 2017-ல் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

One response to “சட்டப்பேரவை பாஜக குழுத்தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு .”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...