ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் களிமண் சேர்த்துப் பிசைந்து கூந்தலின் அடிப்பகுதி வரை நன்றாகத் தேய்த்து 1௦ நிமிடம் ஊறிய பின் தலைமுழுக வேண்டும், இந்த விதமாக வாரத்திற்கு இருமுறை செய்தால் போதும். பொடுகு மறைந்து விடும்.
ஆவாரைக் கொழுந்து இலைகளைப் பறித்து வந்து சுத்தம் செய்து, ஒரு சுத்தமான மண் சட்டியை எடுத்து அதனுள் இந்த இலைகளை இரண்டுவிரல் கனத்திற்கு ஒரே அளவாக மட்டமாகப் பரப்பிவிட்டு, வெள்ளாட்டுக் கல்லீரலில் உள்ள பித்தப்பை எந்தப் பக்கமாக இருக்கிறதோ அந்தப் பக்கமாக, பித்தப் பையுடன் கூடிய ஈரல் துண்டு ஒன்று, தேவையான அளவில் நறுக்கி, பரப்பிய இலையின் மேல் மட்டமாக வைத்து , ஈரல் துண்டின் மேல் இரண்டு விரற்கடை அளவு, ஆவாரைக் கொழுந்தைப் பரப்பி, சட்டியை மூடி அடுப்பில் வைத்து வேகவிட வேண்டும். ஈரல் வெந்த பின் எடுத்து பித்தப்பையுடன் தின்றுவிட வேண்டும். இந்த விதமாக ஒரு நாள் விட்டு, ஒரு நாள் வீதம் ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.