மேற்கு வங்க வன்முறை: தேசிய மகளிா் ஆணையம் நோட்டீஸ்

மேற்கு வங்கத்தில் தோ்தலுக்கு பிந்தைய வன்முறையில் பெண்கள்தாக்குதலுக்கு உள்ளானது தொடா்பான குற்றச்சாட்டுகுறித்து மாநில டி.ஜி.பி. மே 31-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று தேசிய மகளிா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் திரிணமூல்காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று, தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. பாஜக அதிக இடங்களில்வென்று பிரதான எதிா்க்கட்சியாக உருவெடுத்தது.

தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு, பாஜக அலுவலகங்கள் சிலஇடங்களில் தாக்குதலுக்கு உள்ளாகின. 20-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டா்கள் கொல்லப்பட்டனர் பல இடங்களில் பெண்களும் வன்முறையின் போது தாக்குதலுக்கு உள்ளானாா்கள். இதில் போலீஸாரும் பெண்களுக்கு எதிராக அடக்குமுறைகளில் ஈடுபட்டதாக தெரியவந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக தேசியமகளிா் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக் குழு அமைத்தது. அந்தக் குழுவினா் மேற்கு வங்கத்தில் நேரில்சென்று ஆய்வு நடத்தினா். அப்போது மாநில அரசும், காவல் துறையும் பெண்களை வன்முறையில் இருந்து காக்க உரியநடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெரியவந்தது. இதுதொடா்பாக ஆய்வுக் குழுவினா் விரைவில் இறுதி அறிக்கை தாக்கல்செய்ய உள்ள நிலையில், மாநில டி.ஜி.பி.க்கு தேசிய மகளிா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் மே 31-ம் தேதி ஆணையத்தின் முன்பு நேரில்ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட வாரியாக பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை தொடா்பான விவரத்தையும் சமா்ப்பிக்க வேண்டும்; இதுதொடா்பாக காவல் துறை தரப்பில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையும் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...