மேற்கு வங்க வன்முறை: தேசிய மகளிா் ஆணையம் நோட்டீஸ்

மேற்கு வங்கத்தில் தோ்தலுக்கு பிந்தைய வன்முறையில் பெண்கள்தாக்குதலுக்கு உள்ளானது தொடா்பான குற்றச்சாட்டுகுறித்து மாநில டி.ஜி.பி. மே 31-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று தேசிய மகளிா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் திரிணமூல்காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று, தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. பாஜக அதிக இடங்களில்வென்று பிரதான எதிா்க்கட்சியாக உருவெடுத்தது.

தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு, பாஜக அலுவலகங்கள் சிலஇடங்களில் தாக்குதலுக்கு உள்ளாகின. 20-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டா்கள் கொல்லப்பட்டனர் பல இடங்களில் பெண்களும் வன்முறையின் போது தாக்குதலுக்கு உள்ளானாா்கள். இதில் போலீஸாரும் பெண்களுக்கு எதிராக அடக்குமுறைகளில் ஈடுபட்டதாக தெரியவந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக தேசியமகளிா் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக் குழு அமைத்தது. அந்தக் குழுவினா் மேற்கு வங்கத்தில் நேரில்சென்று ஆய்வு நடத்தினா். அப்போது மாநில அரசும், காவல் துறையும் பெண்களை வன்முறையில் இருந்து காக்க உரியநடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெரியவந்தது. இதுதொடா்பாக ஆய்வுக் குழுவினா் விரைவில் இறுதி அறிக்கை தாக்கல்செய்ய உள்ள நிலையில், மாநில டி.ஜி.பி.க்கு தேசிய மகளிா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் மே 31-ம் தேதி ஆணையத்தின் முன்பு நேரில்ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட வாரியாக பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை தொடா்பான விவரத்தையும் சமா்ப்பிக்க வேண்டும்; இதுதொடா்பாக காவல் துறை தரப்பில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையும் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...