நம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையும் நேர்மையாகதான் அணுகுகிறார்கள் என்பதை

யூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் அதன் கடமையை செய்வதை யாரும் தடுக்கப்போவது இல்லை.

அதே நேரத்தில் ஆளும் திமுக.,வுக்கு எதிராக பேசுபவர்களை, தங்களது தகிடு தக்கங்களை புட்டு புட்டு வைப்பவர்களை எல்லாம் களையெடுக்கும் எண்ணம் இருந்தால் அது கண்டிக்க தக்கது. அதே சட்டம் அவர்கள் பக்கம் திரும்பவும் வல்லது.

திமுக நியாயம் தர்மத்துடன்தான் செயல்படுகிறது என்பதை யாரும் இங்கு நம்ப தயாரில்லை. அப்படி இருந்திருந்தால் பிரதமர் மீது மிகவும் இழிவான விமர்சனங்களை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை  வைக்கும் கூட்டங்களை அதிகம் கொண்ட மாநிலமான தமிழகத்தில். இந்நேரம் வழக்குகள் மட்டுமே சிலாயிரங்களை கடந்திருக்க வேண்டும், கைதுகள் மட்டும் சில நூறுகளில் அடங்கியிருக்கவும் வேண்டும் அப்படி ஒன்றும் நடந்திடவில்லையே.

தேர்தல் சமயத்தில் திமுக.,வின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் “பிரதமர் நரேந்திர மோடியின் சித்ரவதையால் தான் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள்  உயிரிழந்தனர்” என்று அவதூறு பரப்பவில்லையா?.

“உதயநிதி ஜி தயவு செய்து உங்கள் பிரசாரத்தின்போது எனது தாய் குறித்து எதுவும் பேச வேண்டாம்! நீங்கள் சொன்னது அனைத்துமே பொய். பிரதமர் நரேந்திர மோடி ஜி என் தாயார் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். எங்கள் வாழ்வின் கடினமான நேரங்களில், பிரதமரும் கட்சியும்தான் துணையாக நின்றனர். உங்களின் பேச்சு எங்களைக் காயப்படுத்திவிட்டது” சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சூரி ஸ்வராஜ்.

“உதயநிதி ஸ்டாலின் ஜி, உங்களுக்குத் தேர்தல் குறித்த அழுத்தம் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால், நீங்கள் பொய் சொல்லும் போதும், என் அப்பாவின் நினைவுகளை மதிக்காமல் பேசும் போதும் நான் அமைதியாக இருக்க முடியாது. என் அப்பா அருண் ஜெட்லியும், பிரதமர் மோடியும் அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பைப் பகிர்ந்து கொண்டனர். அத்தகைய நட்பைத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன்”‘ அருண் ஜெட்லியின் மகள் சோனாலி ஜெட்லி.

அப்போது யாரும் அவசரப்பட்டு வழக்கு தொடுத்திட வில்லையே?. ஆனால் இந்த ஆட்சி தொடுக்கும் வழக்குகள் எல்லாம் அவர்களது கட்சி குடும்பத்தை சுற்றியதாகவே இருக்கிறதே.நம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையும் நேர்மையாகதான் அணுகுகிறார்கள் என்பதை.

நன்றி தமிழ்தாமரை VM வெங்கடேஷ் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...