தி.மு.க சுயமரியாதை இல்லாதவர்களின் கட்சி

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே நென்மேனி கிராமத்தின் வழியே செல்லும் வைப்பாற்றில் அரசுமணல்குவாரி அமைக்கத் திட்டமிட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால், வைப்பாற்றில் மணல்குவாரி அமைக்க அந்தப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், மணல்குவாரி அமைத்தால் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பாதிக்கப்படும், தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டு வறட்சிஉண்டாகும், மண்ணின் கனிம வளச் சத்துகள் நீர்த்துப்போகும் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து பல்வேறு அமைப்பினர் மணல்குவாரிக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், வைப்பாற்றில் அரசு மணல்குவாரி அமைப்பதைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இருக்கன்குடி மாரியம்மன்கோயில் அருகே இன்று போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பா.ஜ.க தேசிய உறுப்பினர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

போராட்டத்தையடுத்து, இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த ஹெச்.ராஜா, செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், “ஆறுகளில் மணல்அள்ளுவதற்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால், இருக்கன்குடி வைப்பாற்றில் மணல்குவாரி அமைப்பதை அரசு கைவிட வேண்டும். இந்தப் பகுதியில் மணல்குவாரி அமையும்பட்சத்தில் விவசாயம் பாதிக்கப்படும். எதிர்ப்புகளைமீறி இங்கு மணல்குவாரி அமைப்பதை அரசு கைவிடவில்லை எனில், என் தலைமையில் பாஜக-வினர் மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம். கோயில் நிர்வாகங்களை ஆய்வுசெய்ய அறநிலையத்துறை சார்பில் குழுஅமைப்பதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால், கோயில்களில் ஆய்வுசெய்ய யார்செல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை. இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளே மதம்மாறியிருப்பதாகக் கூறும் சூழ்நிலையில் கோயில் நிர்வாகத்தை ஆய்வுசெய்ய குழு அமைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுநலன் என்ற போர்வையில் கோயில் நிதியை ஆன்மிகம் தவிர்த்த எந்த ஒருசெயல்பாட்டுக்கும் பயன்படுத்தக் கூடாது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் பட்டியலில் தீபாவளி, பொங்கல் பண்டிகை இல்லை. ஒருகாலத்தில் தமிழகத்தில் பா.ஜ.க இல்லை என்றுசொன்ன காலம் போய் இன்று தமிழகத்தில் எதிர்க்கட்சிபோல் பா.ஜ.க செயல்படுகிறது. காயத்ரி ரகுராம் பாதிக்கப்பட்டிருந்தால் தனிப்பட்டமுறையில் மாநிலத் தலைமையிடமோ அல்லது தேசியத் தலைமையிடமோ தெரிவித்திருக்கலாம். எனவே, கட்சிப் பிரச்சனை குறித்து பொது இடத்தில் விவாதிக்கமாட்டேன். கட்சிகுறித்து பொதுவெளியில் யாரும் பேசவேண்டாம். பாரத பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து தேசியத்தலைமை எந்தவித முடிவும் எடுக்கவில்லை. இந்தியாவிலுள்ள 544 தொகுதியிலும் நிற்கதகுதியான நபர் என்றால், அது பிரதமர் நரேந்திரமோடி மட்டுமே. அப்படி அவர் ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் மகிழ்ச்சியுடன் பணியாற்ற கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால், இதுபற்றி எந்த முடிவும் பா.ஜ.க தலைமையிடத்திலிருந்து அறிவிக்கப்படவில்லை.

பா.ஜ.க மாநிலத் தலைவராகச் செயல்படுவதற்கு அண்ணாமலை தகுதிஇல்லாதவர் என தி.மு.க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். இந்தவேளையில், முதலில் தி.மு.க தலைவராக இருப்பதற்கு முதல்வர் மு.க‌.ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா, இல்லையா என்பதை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெளிவுப்படுத்த வேண்டும். எனவே, பா.ஜ.க கட்சியைப் பற்றி அவர் பேசத் தேவையில்லை. அமைச்சர் கே.என்.நேரு, `இன்பநிதிக்கு குடைபிடிப்பேன்’ என்று சொல்வதிலிருந்தே தி.மு.க சுயமரியாதை இல்லாதவர்களின் கட்சி, தி.மு.க-வுக்கு சுயமரியாதை என்பதேகிடையாது எனத் தெரிகிறது” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...