திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள்

வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை நான் வெளியிட்டதால்தான், என் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வீடியோஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், ஸ்டாலின் பேசுகையில், ஹிந்தி பேசுபவர்களை தமிழகத்தில் வேலையில், நுழைப்பதுமூலம் பாஜ., வை வளர்ப்பதற்கு ஒரு சூழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதற்கு இங்குஇருக்கும் பழனிசாமி கும்பல்கள் வேடிக்கை பார்க்கலாம். அதனை திமுகவோ தமிழக மக்களோ வேடிக்கை பார்த்துக் கொண்டுஇருக்க மாட்டார்கள் என அழுத்தம் திருத்தமாக சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

பொன்முடி பேசுகையில், ஹிந்திபடித்தால் வேலை கிடைக்கும் என சொன்னார்கள். நம் ஊரு கோவையில் போய்பாருங்கள்..ஹிந்திகாரன் தான் பானிபூரி கடை வைத்திருக்கிறார்கள் என பேசுகிறார்.

அமைச்சர் நேரு பேசுகையில், ரயில் நிலையங்களில் பார்த்தால் வடமாநிலத்தவர்கள் அதிக பேர் வேலை பார்க்கிறார்கள் என வடமாநில தொழிலாளர்கள் பற்றி கிண்டலாக பேசுகிறார்.

வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி பேசுகையில், தமிழகத்தில் உள்ள வணிகர்கள் மட்டுமே மாநிலம் முழுவதும் வணிகம் செய்யவேண்டும். வெளி நாடுகளிலிருந்து தமிழகத்தில் வணிகம் செய்ய அனுமதிக்க கூடாது. வடமாநிலத்தவர் தமிழகத்தில் செய்யும் வணிகத்தில் வரி முறைகேடு செய்கிறார் என பேசுகிறார்.

விடுதலைசிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் பேசுகையில், தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். வடமாநில ஆட்களை இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது. அவர்களுக்கு ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை வழங்கப் படுகிறது. தேர்தல் நேரத்தில் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்த கூடும் எனக் கூறுகிறார்.

இந்த வீடியோவுடன் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரசாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என்மீது வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யவும் என அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...