திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள்

வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை நான் வெளியிட்டதால்தான், என் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வீடியோஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், ஸ்டாலின் பேசுகையில், ஹிந்தி பேசுபவர்களை தமிழகத்தில் வேலையில், நுழைப்பதுமூலம் பாஜ., வை வளர்ப்பதற்கு ஒரு சூழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதற்கு இங்குஇருக்கும் பழனிசாமி கும்பல்கள் வேடிக்கை பார்க்கலாம். அதனை திமுகவோ தமிழக மக்களோ வேடிக்கை பார்த்துக் கொண்டுஇருக்க மாட்டார்கள் என அழுத்தம் திருத்தமாக சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

பொன்முடி பேசுகையில், ஹிந்திபடித்தால் வேலை கிடைக்கும் என சொன்னார்கள். நம் ஊரு கோவையில் போய்பாருங்கள்..ஹிந்திகாரன் தான் பானிபூரி கடை வைத்திருக்கிறார்கள் என பேசுகிறார்.

அமைச்சர் நேரு பேசுகையில், ரயில் நிலையங்களில் பார்த்தால் வடமாநிலத்தவர்கள் அதிக பேர் வேலை பார்க்கிறார்கள் என வடமாநில தொழிலாளர்கள் பற்றி கிண்டலாக பேசுகிறார்.

வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி பேசுகையில், தமிழகத்தில் உள்ள வணிகர்கள் மட்டுமே மாநிலம் முழுவதும் வணிகம் செய்யவேண்டும். வெளி நாடுகளிலிருந்து தமிழகத்தில் வணிகம் செய்ய அனுமதிக்க கூடாது. வடமாநிலத்தவர் தமிழகத்தில் செய்யும் வணிகத்தில் வரி முறைகேடு செய்கிறார் என பேசுகிறார்.

விடுதலைசிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் பேசுகையில், தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். வடமாநில ஆட்களை இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது. அவர்களுக்கு ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை வழங்கப் படுகிறது. தேர்தல் நேரத்தில் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்த கூடும் எனக் கூறுகிறார்.

இந்த வீடியோவுடன் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரசாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என்மீது வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யவும் என அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...