புதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்

‘‘கிழக்கிந்தியாவை உலோகத்தொழில் தொடர்பான உற்பத்தி மையமாக ஆக்குதல்’’ என்ற தலைப்பிலான இணைய கருத்தரங்கை இந்திய உலோகங்கள் மையம்நடத்தியது.

இதில் உலோகத் துறை நிபுணர்கள், எஃகு அமைச்சக அதிகாரிகள், மாநில அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டு பேசியதாவது:

கிழக்கு இந்தியாவை, நாட்டின் மற்ற வளர்ச்சியடைந்த பகுதிகளுக்கு இணையாக கொண்டுவரும் நோக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி பணியாற்றிவருகிறார். திறமையான வேலையாட்கள், அபரிமிதமான இயற்கை வளங்கள், ஆசையுள்ள மக்கள் உள்ளதால், தொழில் நுட்பத்துடன் கூடிய உற்பத்தி சூழலை உருவாக்க கிழக்கு இந்தியா தயாராகஉள்ளது. சிலநாடுகளில் மட்டுமே, கிழக்கு இந்தியாவில் உள்ளதுபோல அபரிமிதமான இயற்கை வளங்கள் உள்ளன.

எஃகு துறையில் தொடங்கப்பட்ட பூர்வோதையா திட்டம் கிழக்கிந்தியாவில் புதிய வளர்ச்சியுகத்தை ஏற்படுத்தக் கூடியது. கிழக்கிந்தியாவில் உள்நாட்டு நீர்போக்குவரத்து வழிகள் உட்பட பல கட்டமைப்புகளை மேம்படுத்த மத்தியஅரசு முயற்சிகள் மேற்கொள்கிறது. கிழக்கிந்தியா வளமான கட்டிடக்கலை, கடல்சார் பொருளாதாரம், தொழில்வளர்ச்சியை கொண்டிருந்தது. அந்த பெருமையை மீட்டெடுக்கும் நேரம் வந்துள்ளது.

வளர்ச்சியும், சூழலியலும் ஒன்றாக இருக்கமுடியும். உலகம் பசுமையான எதிர்காலத்தை நோக்கி செல்ல பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுகிறார். தொழில்வளர்ச்சி, நீடித்த வளர்ச்சி மற்றும் கொள்கைகள் ஆகியவை மக்களுக்கும், வர்த்தகத்துக்கும், சுற்றுச் சூழலுக்கும் சாதகமாக இருக்கும் வகையில் அரசு கொண்டு செல்லவேண்டும்.

பசுமையான, சுத்தமான முறையில் எஃகுதயாரிப்பை மேற்கொள்ள இந்திய உலோகமையம் உதவ வேணடும். தொழில்புரட்சி 4.0-வுக்கு, புதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...