புதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்

‘‘கிழக்கிந்தியாவை உலோகத்தொழில் தொடர்பான உற்பத்தி மையமாக ஆக்குதல்’’ என்ற தலைப்பிலான இணைய கருத்தரங்கை இந்திய உலோகங்கள் மையம்நடத்தியது.

இதில் உலோகத் துறை நிபுணர்கள், எஃகு அமைச்சக அதிகாரிகள், மாநில அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டு பேசியதாவது:

கிழக்கு இந்தியாவை, நாட்டின் மற்ற வளர்ச்சியடைந்த பகுதிகளுக்கு இணையாக கொண்டுவரும் நோக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி பணியாற்றிவருகிறார். திறமையான வேலையாட்கள், அபரிமிதமான இயற்கை வளங்கள், ஆசையுள்ள மக்கள் உள்ளதால், தொழில் நுட்பத்துடன் கூடிய உற்பத்தி சூழலை உருவாக்க கிழக்கு இந்தியா தயாராகஉள்ளது. சிலநாடுகளில் மட்டுமே, கிழக்கு இந்தியாவில் உள்ளதுபோல அபரிமிதமான இயற்கை வளங்கள் உள்ளன.

எஃகு துறையில் தொடங்கப்பட்ட பூர்வோதையா திட்டம் கிழக்கிந்தியாவில் புதிய வளர்ச்சியுகத்தை ஏற்படுத்தக் கூடியது. கிழக்கிந்தியாவில் உள்நாட்டு நீர்போக்குவரத்து வழிகள் உட்பட பல கட்டமைப்புகளை மேம்படுத்த மத்தியஅரசு முயற்சிகள் மேற்கொள்கிறது. கிழக்கிந்தியா வளமான கட்டிடக்கலை, கடல்சார் பொருளாதாரம், தொழில்வளர்ச்சியை கொண்டிருந்தது. அந்த பெருமையை மீட்டெடுக்கும் நேரம் வந்துள்ளது.

வளர்ச்சியும், சூழலியலும் ஒன்றாக இருக்கமுடியும். உலகம் பசுமையான எதிர்காலத்தை நோக்கி செல்ல பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுகிறார். தொழில்வளர்ச்சி, நீடித்த வளர்ச்சி மற்றும் கொள்கைகள் ஆகியவை மக்களுக்கும், வர்த்தகத்துக்கும், சுற்றுச் சூழலுக்கும் சாதகமாக இருக்கும் வகையில் அரசு கொண்டு செல்லவேண்டும்.

பசுமையான, சுத்தமான முறையில் எஃகுதயாரிப்பை மேற்கொள்ள இந்திய உலோகமையம் உதவ வேணடும். தொழில்புரட்சி 4.0-வுக்கு, புதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜே ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜேபி நட்டாவையும் சந்நதித்த பழனிசாமி 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான ...

அ. தி மு க , பாஜக கூட்டணி – விளக் ...

அ. தி மு க ,  பாஜக கூட்டணி – விளக்கமளித்த பழனிசாமி அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு அதிமுக ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிர ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 ல் திறந்து வைக்கிறார் பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை க ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை கைவிடும் இயக்கங்கள் ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல்இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்க ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...