ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூறுகிறேன்

கார்கில் போரின் வெற்றிதினமான இன்று, பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ வீரர்களை நினைவு கூர்ந்துள்ளார். இந்தியாவின் கார்கில்பகுதிக்குள் கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் பயங்கர வாதிகள் ஊடுருவினர். இதையடுத்து கார்கில் பகுதியிலிருந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளை விரட்டியடிக்க இந்தியா தயாரானது. அந்தபோர் திட்டத்துக்கு ஆப்ரேஷன் `விஜய்’ என்று பெயரிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கார்கில் லடாக்பகுதியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடுமையான போர் நடந்தது. உயரமான மலைத் தொடர்களில் மிகுந்த சவால்களை எதிர்கொண்ட இந்தபோரில் 527 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதில் 4,000க்கும் அதிகமான பாகிஸ்தான் இராணுவவீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த போரானது அந்த ஆண்டு மே மாதம் தொடங்கி ஜூலை வரை நடைபெற்றது.

இந்த போரில் இறுதியாக இந்தியா வெற்றிவாகை சூடியது. இந்த போரில் வீரமரணமடைந்த இராணுவ வீர்ரர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் போர் வெற்றிதினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள போர்வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர்பக்கத்தில் கூறுகையில், ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூறுகிறேன். நமது நாட்டைக் காப்பாற்றுவதற்காக கார்கில் போரில்பங்கேற்று தங்கள் இன்னுயிரை தியாகம்செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். அவர்களின் வீரம் எங்களுக்கு, தினம்தோறும் உத்வேகம் அளித்துவருகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்தவருடம் வானொலி உரையில் கார்கில்போர் பற்றி மோடி பேசிய ஒலி இணைப்பையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...