முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திருநெல்வேலியில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
நாட்டின் 75-வது சுதந்திரதினத்தை பாஜக தொண்டர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி யோடு கொண்டாடினர். உலகரங்கில் இந்தியாவை முதன்மை நாடாகமாற்ற பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக உழைத்து வருகிறார். வேளாண்மை, தொழில்துறை உட்பட அனைத்திலும் வேகமாக நாடுமுன்னேற வழிவகை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பெட்ரோல் விலையை குறைத் திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் சில விடுதலைப் போராட்ட வீரர்களின் மணி மண்டபங்களில் வரலாற்றுத் தகவல்கள் சரியாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விடுதலைக்காக போராடிய அனைத்து வீரர்களின் வரலாறுகளையும் இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் அவர்களது மணிமண்டபங்களில் சரியாக பதிவிடுவது அரசின்கடமை ஆகும். பாஜக சார்பில் மாநில அரசிடம் இந்தக் கோரிக்கையை முன்வைப்போம். வரும் உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும். அதிக இடங்களில் எங்கள்கூட்டணி வெற்றி பெறும் என்றார்.
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |