மூத்த பத்திரிகையாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை (பாஜக) முன்னாள் உறுப்பினரும் (2003 – 2009 & 2010 – 2018), ‘தி பயனீர்’ நாளிதழின் முன்னாள் தலைமை நிர்வாகி மற்றும் ஆசிரியரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய மூத்த தலைவருமான திரு. சந்தன் மித்ரா (66) இன்று (செப். 2) காலமானார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்பலப்படுத்தியதில் இவரது பங்களிப்பு அளப்பரியது. பிற பத்திரிகைகளுக்கு முன்னோடியாக (பயனீர் என்றால் அதுவே பொருள்) நிருபர் கோபிநாத் மூலமாக மித்ரா, அன்றைய ஊழல் அரசுக்கு எதிராக நடத்திய இதழியல் யுத்தம் என்றும் நன்றிக்குரியது.
2008 – 2009 ஆண்டுகளில், ‘தி பயனீர்’ நாளிதழில் என்ன செய்தி வெளியாகப் போகிறதோ என்று தினமும் மன்மோகன் சிங் அரசு அஞ்சியதுண்டு. பல அன்பான வேண்டுகோள்கள், ஆசைகாட்டல்கள், மிரட்டல்களைப் பொருட்படுத்தாமல் சந்தன் மித்ரா அந்த எழுத்துப் போரை நடத்தி தேசம் காத்தார்.
முன்னோடி இதழாளருக்கு அஞ்சலி!
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |