மாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சேர்க்கும் உ.பி. ஆசிரியைக்கு பிரதமர் பாராட்டு

மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியரை தேடிகண்டுபிடித்து பள்ளியில் சேர்க்கும் உத்தரபிரதேச ஆசிரியையை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி உள்ளார்.

பிரதமரின் மனதின்குரல் வானொலி உரை நேற்று முன்தினம் ஒலிபரப்பானது. அப்போது உத்தரபிரதேசத்தின் பரேலியை சேர்ந்த ஆசிரியைக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.

‘‘உத்தரபிரதேசத்தில் ‘ஓர் ஆசிரியர், ஓர் அழைப்பு’ என்ற உன்னத இயக்கத்தை பரேலியின் டபோரா கங்காபூர் பள்ளித்தலைமை ஆசிரியை தீப்மாலா பாண்டே தலைமையேற்று நடத்தி வருகிறார். இந்த இயக்கத்தில் 350-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள் இணைந்துள்ளனர்.

இவர்கள் சேவையுள்ளத்தோடு கிராமந்தோறும் சென்று மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரை தேடிஅலைகின்றனர். அவர்களை ஏதாவது ஓருபள்ளியில் சேர்த்து விடுகின்றனர். மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக பாடுபடும் தீப்மாலாவுக்கும் அவருடன் இணைந்திருக்கும் ஆசிரியர்களுக்கும் மனம்திறந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று பிரதமர் கூறினார்.

இதுகுறித்து ஆசிரியை தீப்மாலா பாண்டே (38) கூறியதாவது:

கடந்த 2018-ம் ஆண்டில் அன்மோல் என்ற செவித்திறன் குறைந்த மாணவனை எங்கள்பள்ளியில் சேர்த்தேன். அந்த மாணவனின் கல்வி ஆர்வம் என்னை பிரம்மிக்கவைத்தது. அப்போதுமுதல் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக தன்னலமின்றி சேவையாற்றிவருகிறேன்.

கடந்த 4 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரை கண்டறிந்து அவர்களை பள்ளி களில் சேர்த்து வருகிறேன். என்னுடைய சேவையை பார்த்து மாநிலம்முழுவதும் 350-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் என் னோடு இணைந்துள்ளனர். இதுவரை 600-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்துள்ளோம்.

கரோனா ஊரடங்கின் போது எங்கள் இயக்கத்துக்கு ‘ஓர் ஆசிரியர், ஓர் அழைப்பு’ என்று பெயர் சூட்டினோம். என்னோடு இணைந்துள்ள ஆசிரியர்கள் மாதம் ஒருமுறை ஒன்றுகூடி மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்வி திட்டங்கள் குறித்து ஆலோசிக்கிறோம். அவர்களுக்காக ஆன்லைன் வகுப்புகளை நடத்துகிறோம்.கருத்தரங்குகள், சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

என்னையும் என்னோடு இணைந்துள்ள ஆசிரியர்களையும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு நன்றியை உரித்தாக்குகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...