பிரதமர் மோடியின் தீவிரமுயற்சிகளால் அவரது சொந்ததொகுதியான வாரணாசியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக வாரணாசியின் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் ரூ.339 கோடியில் விரிவாக்கம்செய்யப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. இந்தகோயிலை ஒட்டியுள்ள 40-க்கும் மேற்பட்டகோயில்கள் அழகுபடுத்தப் பட்டன. வாரணாசியின் கங்கைநதி படித்துறைகள் புனரமைக்கப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தற்போது கோயில்வளாகம் பிரம்மாண்டம் ஆக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து வாரணாசிக்கு வரும்பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் அவர் பேசியதாவது:
சிராவண மாதத்தில் 12 ஜோதிர் லிங்கங்களுக்கு பக்தர்கள் புனிதபயணம் மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக வாரணாசி, அயோத்தி, மதுரா, உஜ்ஜைன் உள்ளிட்ட புனிதத் தலங்களில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
குறிப்பாக வாரணாசிக்கு ஓராண்டில் 10 கோடிக்கும் அதிகமானபக்தர்கள் வருகை தருகின்றனர். இதன்மூலம் அந்த நகரின் பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த 2 பேர், சுவாமி விவேகானந்தரின் போதனை களால் ஈர்க்கப்பட்டு அண்மையில் அமர்நாத் புனிதயாத்திரை மேற்கொண்டனர். அனைத்து தரப்பினரையும் இந்தியா அரவணைக்கிறது. இது நமது நாட்டின் தனிச்சிறப்பு. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |