கட்சித்தலைவர் மீதே பாஜக தலைமை நடவடிக்கை ஒமர் அப்துல்லா பாராட்டு

ஒரு பிரிவினரின் மத உணர்வுகளைப் புண் படுத்தியதாக ஜம்மு-காஷ்மீரின் மூத்த பாஜகதலைவர் விக்ரம் ரந்தாவா மீது வழக்குப் பதிவு செய்ய பட்டுள்ளது.

துபையில் அண்மையில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதை சிலர் கொண்டாடியபோது, குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக மூத்த பாஜக தலைவரும் முன்னாள் எம்எல்சி.,யுமான விக்ரம் ரந்தாவா சிலகருத்துகளை வெளியிட்டார். அவை காணொலியாக இணையதளத்தில் பரவியதையடுத்து, பலர் அவரது பேச்சை கண்டித்தனர்.

அதையடுத்து, விக்ரம் ரந்தா வாவிடம் விளக்கம்கேட்டு ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச பாஜகவின் ஒழுங்கு நடவடிக்கைக்குழுத் தலைவர் சுனில்சேத்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்தநோட்டீஸில், “ஒருகுறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக நீங்கள் பொறுப்பற்ற முறையிலும் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் கருத்துகளை வெளியிட்டிருப்பதை கட்சியால் ஏற்கமுடியாது. அது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகும். இதற்காக 48 மணி நேரத்துக்குள் தாங்கள் விளக்கம் அளிப்பதுடன், மன்னிப்பும் கேட்கவேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் யூனியன்பிரதேச பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறுகையில், “விக்ரம் ரந்தாவாவின் கருத்துகளை கேட்டதும் தனிப்பட்டமுறையில் எனது மனம் காயமடைந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் “அனைவருக்குமான வளர்ச்சி’ என்ற லட்சியத்துக்கும் பாஜகவின் அடிப்படை கொள்கைகளுக்கும் இவைமுற்றிலும் எதிரானவை’ என்று தெரிவித்தார்.

இதனிடையே, இந்த விவகாரத்தில் காவல்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவர்கூறுகையில், “விக்ரம் ரந்தாவா மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், மத உணர்வுகளைத் தூண்டி வன்முறைக்கு வித்திடும் வகையில் பேசுவது (பிரிவு 295-ஏ), வகுப்புவாத வெறுப்பை தூண்டும்வகையில் அறிக்கை வெளியிடுவது (பிரிவு 505 -2) ஆகிய பிரிவுகளில் ஜம்மு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிராக தனது கட்சித்தலைவர் மீதே பாஜக தலைமை நடவடிக்கை எடுத்திருப்பதை தேசியமாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர்அப்துல்லா பாராட்டியுள்ளார். இந்த நடவடிக்கையை மற்றவர்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...