கட்சித்தலைவர் மீதே பாஜக தலைமை நடவடிக்கை ஒமர் அப்துல்லா பாராட்டு

ஒரு பிரிவினரின் மத உணர்வுகளைப் புண் படுத்தியதாக ஜம்மு-காஷ்மீரின் மூத்த பாஜகதலைவர் விக்ரம் ரந்தாவா மீது வழக்குப் பதிவு செய்ய பட்டுள்ளது.

துபையில் அண்மையில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதை சிலர் கொண்டாடியபோது, குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக மூத்த பாஜக தலைவரும் முன்னாள் எம்எல்சி.,யுமான விக்ரம் ரந்தாவா சிலகருத்துகளை வெளியிட்டார். அவை காணொலியாக இணையதளத்தில் பரவியதையடுத்து, பலர் அவரது பேச்சை கண்டித்தனர்.

அதையடுத்து, விக்ரம் ரந்தா வாவிடம் விளக்கம்கேட்டு ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச பாஜகவின் ஒழுங்கு நடவடிக்கைக்குழுத் தலைவர் சுனில்சேத்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்தநோட்டீஸில், “ஒருகுறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக நீங்கள் பொறுப்பற்ற முறையிலும் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் கருத்துகளை வெளியிட்டிருப்பதை கட்சியால் ஏற்கமுடியாது. அது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகும். இதற்காக 48 மணி நேரத்துக்குள் தாங்கள் விளக்கம் அளிப்பதுடன், மன்னிப்பும் கேட்கவேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் யூனியன்பிரதேச பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறுகையில், “விக்ரம் ரந்தாவாவின் கருத்துகளை கேட்டதும் தனிப்பட்டமுறையில் எனது மனம் காயமடைந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் “அனைவருக்குமான வளர்ச்சி’ என்ற லட்சியத்துக்கும் பாஜகவின் அடிப்படை கொள்கைகளுக்கும் இவைமுற்றிலும் எதிரானவை’ என்று தெரிவித்தார்.

இதனிடையே, இந்த விவகாரத்தில் காவல்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவர்கூறுகையில், “விக்ரம் ரந்தாவா மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், மத உணர்வுகளைத் தூண்டி வன்முறைக்கு வித்திடும் வகையில் பேசுவது (பிரிவு 295-ஏ), வகுப்புவாத வெறுப்பை தூண்டும்வகையில் அறிக்கை வெளியிடுவது (பிரிவு 505 -2) ஆகிய பிரிவுகளில் ஜம்மு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிராக தனது கட்சித்தலைவர் மீதே பாஜக தலைமை நடவடிக்கை எடுத்திருப்பதை தேசியமாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர்அப்துல்லா பாராட்டியுள்ளார். இந்த நடவடிக்கையை மற்றவர்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...