திமுகவும் நன்றும் பிறர் தர வாரா.

100 வயது தாண்டிய அன்னை. அவரை, அரசு தனக்களித்த வீட்டில்வைத்துக் கொள்ளாமல், தன்னுடைய சொந்தவீட்டில் தங்க வைக்கிறார் மோடி. மக்கள் சேவையின்போது அரசாங்கப் பணம் ஒன்றையும் தொடுவதில்லை என்ற கறைபடியாத சித்தாந்தம் கொண்டவர்.

இந்தியாவின் ஜனாதிபதியாய் இருந்த பொழுது, தன் சொந்தங்கள் தென் கோடியில்இருந்து தன்னைப் பார்க்க வரும்பொழுதுகூட, தன் சொந்தக் காசு செலவு செய்து ரயில் பயணம் செய்ய வைத்தவர். சொந்தங்கள் இல்லாமல் தனியே ஜனாதிபதி மாளிகையில் வாழ்ந்தவர், அப்துல்கலாம் ஐயா.

கொரோனா காலத்தின் கொடுமையை மக்கள் சந்தித்து கொண்டிருந்கும்பொழுது, தன் தந்தை இறக்கிறார். இந்நேரத்தில் இரண்டுநாட்கள் தந்தையின் இறுதிகாரியத்துக்கு சென்றுவிட்டால் தன்மாநில மக்கள் நிலை தாழ்ந்துபோகும் என்று தன் தந்தையின் இறுதி காரியத்துக் கூட செல்லாமல் மக்கள்பணியில் இருக்கிறார் யோகி ஆதித்யநாத். மேலும் தன் சொந்தசகோதரி ஏதோ கடை வைத்து வியாபாரம் செய்வதாகக் கேள்வி.

இந்த மனிதர்கள் பதவியை சேவையாக நினைக்கும் மாமனிதர்கள். அவர்கள் கொண்ட சித்தாந்தம் அப்படி. இது பாரதத்துக்கு கிடைத்த பொக்கிஷம்.ஆனால் இங்கே, இன்று துபாயில் அரசுசார்பாக கலந்து கொள்வதாகச் சொல்லிக்கொண்டு, மனைவி, மகன், பேரன்1, பேரன்2, மகள், மருமகன், என்று ஒரு குடும்பமே தனி விமானத்தில் சென்றிருக்கிறது. மகள், பேரன், மருமகன் எல்லாம் அரசுசார்பான விழாவில் கலந்து கொள்ள என்ன தகுதி இருக்கிறது?

தமிழக மக்களை மூளைச் சலவை செய்ய உபயோகப்படுத்தப்படும் ஊடகங்கள், இந்த சுயநலத்தைப் புகழ்ந்து “ஆஹா. இன்று முதல் நீ ..” என்று புகழாரம்சூட ஆரம்பித்து விட்டன. இதில் ஒரு அயல்நாட்டு அடிமை “அடுத்த முறை நீங்கள் பிரதமராக வர வேண்டும் என்று வாலை ஆட்டுகிறது. இவர்களுக்கெல்லாம் அடிமைத்தனம் ஒருபோதை. அந்த போதை தரும்சுகம், இவர்கள் விரும்பி சுவைப்பது. இவர்களுக்கு அண்ணாமலை எப்படி பிடிக்கும்!

“தானே தனக்குப் பகைவனும் நட்பும்” என்பதே தமிழரின் நிலை இப்பொழுது

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...