ஆளுநர் மீதான தாக்குதல் கண்டனத்துக்குரியது

தமிழுக்கும், சைவத்துக்கும் பெரும்தொண்டாற்றி வரும் தருமபுரம் ஆதீனத்தின் விழாவில் பங்கேற்பதற்காக, தமிழகஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள், திருக்கடையூரில் இருந்து தருமபுரம் ஆதினத்திற்கு காரில்சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆளுநர் பயணித்தகாரின் மீதும், உடன் சென்றவாகனங்கள் மீதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் கருப்புக்கொடி, தண்ணீர் பாட்டில்கள், கற்கள் வீசி தாக்கியுள்ளனர். இது கடும்கண்டனத்துக் குரியது.

அரசியல மைப்பு சட்டப்படி, தமிழக அரசு நிர்வாகத்தின் தலைவரான ஆளுநருக்கே பாதுகாப்பற்ற சூழல் தமிழகத்தில் உருவாகி இருப்பது பெரும் கவலை அளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எந்தஅளவுக்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு, இந்தச் சம்பவமே சிறந்த உதாரணம்.

தங்களின் விருப்பப்படி ஆளுநர் செயல்படவில்லை என்பதற்காக, அவருக்கு எதிரான மனநிலையை உருவாக்கும் வகையில் திமுகவினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘முரசொலி’யில் ஆளுநரைப்பற்றி அவதூறு பரப்பி வருகின்றனர். முன்னாள் பிரதமர் திருமதி இந்திராகாந்தி மீது மதுரையில் தாக்குதல் நடத்தியவர்கள் திமுகவினர். இதுபோல திமுகவின் கடந்தகால வரலாறுகளை பார்க்கும்போது தமிழக ஆளுநர் மீதான இந்தத் தாக்குதல் திட்டமிட்ட ரீதியில் நடந்திருப்பதாக சந்தேகம் எழுகிறது.

எனவே, இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. ஆளுநர் சென்ற கார் மீதும், உடன் சென்ற வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர்களை கைதுசெய்து, சட்டப்படி உரிய தண்டனை வழங்க வேண்டும். இதற்கு பின்னணியில் இருந்தவர்களையும் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், “ஆளுநருக்கும் எனக்கும் தனிப்பட்ட பகை எதுவும் இல்லை” என்ற முதலமைச்சரின் கூற்று உண்மையாகும். நடவடிக்கை எடுப்பீர்களா முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே….!

நன்றி வானதி சீனிவாசன்
பாஜக தேசிய தலைவர் மகளீர் அணி

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...