தொப்புள்கொடி உறவுகளையும் வளரவைப்போம்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உழைப்பாளர் தின கூட்டம் நுவரெலியா – கொட்டகலையில் இன்று இடம்பெற்றது. இந்தஉழைப்பாளர் தின கூட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முக்கிய விருந்தினராக கலந்துகொண்டார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுசெயலாளரும், நாடாளுமன்ற எம்.பியுமான ஜீவன் தொண்டமான் மற்றும் தலைவர் செந்தில்தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் ராமேஷ்வரன், கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இந்த மே தின கூட்டத்திற்கு ஏராளமான இந்திய வம்சாவளி தமிழர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் அமோகவரவேற்பு அளிக்கப்பட்டதோடு, அவருக்கு நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கி கௌரவிக்கப்பட்டது . இந்நிகழ்வில் கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, பாரத பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சியின் கீழ் முழு உலகமும் இந்தியாவை திரும்பிபார்க்கின்றது. இந்தியா என்பது வல்லரசு நாடாக மாறியுள்ளது. உலகில் 5வது மிகப்பெரிய பொருளாதார பலமுடைய நாடாக மாறியுள்ளது. ரஷ்யா, உக்ரைனுக்கிடையில் மோதல் ஏற்பட்ட போதுகூட, உக்ரைனில் வாழ்ந்த இந்தியர்களை சிறு காயமின்றி மீட்டெடுத்தார்.

இலங்கையை அருகிலுள்ள நாடு, எமதுசொந்தங்கள் வாழும் நாடு என இருகோணத்தில் இந்தியா பார்க்கின்றது. அதனால்தான் நெருக்கடியான கட்டங்களில் உதவிகள் வழங்கப்படுகின்றன. உயிர் காப்பு மருந்துதேவை என்று சொன்னபோது, 107 வகையான 760 கிலோ மருந்துகளை அனுப்பிவைத்துள்ளோம். எதிர்காலத்திலும் உதவுவோம். மலையக மக்களுக்கான உதவிகளும் தொடரும். நாம்வளரும் அதே வேளை, எமது தொப்புள்கொடி உறவுகளையும் வளரவைப்போம். மலையகம் கல்வியால் உயர வேண்டும். அதற்கான உதவிகளும் தொடரும்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, நீண்ட காலத்துக்கானதல்ல. விரைவில் நிலைமை மாறவேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன். இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக் கொண்டிருக்கின்றது. அன்று அனுமான் எப்படி சஞ்சீவ மலையை சுமந்தாரோ, அதுபோலவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமப்பதற்கு பாரதபிரதமர் நரேந்திர மோடியும் தயாராகவே இருக்கின்றார்.” – என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...