ஜனநாயகத்தில் நமது நம்பிக்கை, சுதந்திரம் ஆகியவையும் நம்மை இணைக்கிறது

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் இன்று உரையாற்றுவதை மிகுந்த பெருமையாக கருதுகிறேன்.

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே,

உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தின் அரசியலமைப்புத் தலைவர் என்ற முறையில் ஜமைக்கா நாட்டின் துடிப்பான ஜனநாயக தலைவர்கள் மத்தியில் உரையாற்றுவது மகிழ்ச்சிஅளிக்கிறது.

ஜமைக்கா நாட்டிற்கு பயணிப்பது, அதன்வாழும் கலாச்சாரத்தை அனுபவிப்பது, அந்நாட்டு மக்களை சந்திப்பது ஆகியவற்றை மிகஆவலுடன் எதிர் நோக்கியிருந்தேன்.

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே,

இந்தியர்களுக்கு ஜமைக்கா ஆதரவு அளித்திருப்பதுடன் அவர்களுக்கு கௌரவத்தையும் மரியாதையையும் வழங்கியுள்ளது. இதன்காரணமாக அரசியலில் மட்டுமல்லாமல் வர்த்தகம், இசை, விளையாட்டு, உடை மற்றும் உணவிலும் வளமான இந்தியத் தன்மையைக் காணமுடிகிறது.

இந்திய சமூகத்தினரும், கலாச்சார உறவுகள் மட்டுமே நமது இருநாடுகளை இணைப்பதில்லை, ஜனநாயகத்தில் நமது நம்பிக்கை மற்றும் சுதந்திரம் ஆகியவையும் நம்மை இணைக்கின்றன. அனைத்து குடிமக்களும் சமமாகவே உருவாக்க ப்பட்டார்கள் என்பது ஜமைக்கா நாட்டு அரசியலமைப்பின் மையதூணாகும். எங்கள் முன்னோர்களும் இதேநம்பிக்கையை பகிர்ந்ததுடன், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனிமனித சுதந்திரத்தை பெற்று தந்தார்கள். சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக்கொண்ட நவீன நாட்டை அவர்கள் உருவாக்கினார்கள். அவ்வாறு உருவாக்கிய போது, ‘வேறுபட்ட போதும், ஒரேமக்கள்’ என்ற ஜமைக்காவின் கோஷங்களைப் போலவே ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே,

இந்தியாவில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்காக தம்மையே அர்ப் பணித்து, சமூக அவலங்களை களைந்தார். அரசியலமைப்பில் சமூகமேம்பாட்டிற்கான வசதிகளை அறிமுகப்படுத்தி, ‘இந்திய அரசியலமைப்பின் சிற்பி’ என்று அன்போடு அழைக்கப் பட்டார். கிங்ஸ்டனில் நேற்று நான் திறந்து வைத்த சாலைக்கு டாக்டர் அம்பேத்கர் பெயர்சூட்டிய ஜமைக்கா நாட்டு அரசுக்கு எனதுநன்றி.

கொவிட்-19 நெருக்கடியில் இருந்து உலகம்மீண்டு வரும் வேளையில் மாபெரும் பொருளாதாரங்களுள் மிகவேகமாக இந்தியா வளர்வதாகக் கணிக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்தது முதல் பல்வேறுமுறைகள் வேளாண்மை உற்பத்தியை நாங்கள் பெருக்கியுள்ளதுடன், உணவு தானியங்களின் நிகர ஏற்று மதியாளராகவும் செயல் படுகிறோம். தரமான மருந்துகளையும், தடுப்பூசிகளையும் மலிவான விலைகளில் தயாரிப்பதால் ‘உலகின் மருந்தகமாக’ இந்தியா அழைக்கப் படுகிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் 150 ஜிகாவாட் அளவை இந்தியா கடந்திருப்பதுடன், 2030-ஆம் ஆண்டிற்குள் 450 ஜிகாவாட்திறன் என்ற இலக்கை எட்ட நிர்ணயித்துள்ளது. எங்களது தேசிய கல்விகொள்கை 2020 இன் கீழ் புதிய இந்திய தொழில்நுட்ப கழகங்களை வெளிநாடுகளில் தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ஓர்இந்திய தொழில்நுட்ப கழகத்தை நிறுவ ஜமைக்கா விருப்பம் தெரிவித் திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களே,நமது தூதரக உறவின் 60-வது ஆண்டு நிறை வடைவதை நாம் கொண்டாடும் வேளையில், வளர்ந்துவரும் நமது கூட்டுமுயற்சி, அடிப்படைக் கொள்கைகள் மற்றும் பகிர்ந்துகொள்ளும் மாண்புகளிலிருந்து நாம் எழுச்சியும் ஆற்றலும் பெறுவோம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

பொக்ரானில் முப்படை போர் பயிற்ச ...

பொக்ரானில் முப்படை போர் பயிற்சி: பிரதமர் நேரில் பார்வை ராஜஸ்தான் பொக்ரானில் இன்று 'பாரத் ஷக்தி' என்ற உள்நாட்டில் ...

இது தான் ஒரு தேசத்தின் கவுரவம்

இது தான் ஒரு தேசத்தின் கவுரவம் '' ஐ.நா., விவாதத்தில் எங்களிடம் இருந்து கச்சாஎண்ணெய் வாங்குவது ...

திமுகவின் வெறுப்புப் பேச்சு

திமுகவின்  வெறுப்புப் பேச்சு திமுக எம்பி. ஆ.ராசா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில் ‘இந்தியா ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...