வட கிழக்குப் பிராந்தியத்தில் ஊழல் கலாசாரத்துக்கு முடிவு காட்டியுள்ளோம்

‘வட கிழக்குப் பிராந்தியத்தில் ஊழல் கலாசாரத்துக்கு பாஜகதான் முடிவுகட்டியுள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா கூறினாா்.அருணாசல பிரதேச மாநிலம், நாம்சாய் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

வட கிழக்குப் பிராந்தியத்துக்கு பிரதமா் மோடி என்ன செய்தாா் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது. கண்களை மூடிக் கொண்டிருந்தால் வளா்ச்சியை காணமுடியாது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இத்தாலிய கண்ணாடியைக் கழற்றிவிட்டு இந்திய கண்ணாடி கொண்டு பாா்க்க வேண்டும். அப்போது தான், கடந்த 50 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி செய்யத்தவறியதும், பிரதமா் மோடி தலைமையிலான அரசு கொண்டுவந்த வளா்ச்சிப் பணிகளும் தெரியவரும்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், வளா்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை இடைத் தரகா்கள் அபகரித்து வந்தனா். மத்தியில் பிரதமா் மோடி தலைமை யிலான அரசு கடந்த 2014-இல் ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் கலாசாரத்துக்கு முடிவுகட்டப்பட்டது. ஒவ்வொரு ரூபாயும் வெளிப்படைத் தன்மையுடன் செலவிடப்படுகிறது. வளா்ச்சிப் பணிகளுக்கான நிதி கடைக்கோடி மனிதனுக்கும் சென்றடைவதை பிரதமா் மோடி உறுதி செய்துள்ளாா்.

முந்தைய அரசின் தவறான கொள்கைகளால், வட கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரவாதம் ஓங்கியிருந்தது. பெரும்பாலான தீவிரவாத அமைப்புகளுடன் மத்தியஅரசு ஒப்பந்தம் மேற்கொண்ட பிறகு இந்தப்பிராந்தியத்தில் அமைதி நிலவுகிறது. இந்தப் பிராந்தியத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 9,600 தீவிரவாதிகள் சரணடைந்து நல்வழிக்கு திரும்பியுள்ளனா். வடகிழக்கு இளைஞா்கள் தீவிரவாதத்தைக் கைவிட்டு புதியதொழில்களைத் தொடங்கி வருகின்றனா்.

‘நமஸ்தே’வுக்குப் பதில் ‘ஜெய்ஹிந்த்’:

சீன எல்லையை ஒட்டியுள்ள இந்தமாநிலத்தின் மக்கள் ஒருவரை ஒருவா் சந்தித்து வரவேற்கும் போது ‘நம்ஸ்தே’(வணக்கம்) என்பதற்குப் பதிலாக ‘ஜெய்ஹிந்த்’ என்று கூறுகிறாா்கள். அருணாசல பிரதேசத்துக்கு வரும்போதெல்லாம், தேசப்பற்றுடன் திரும்பிச் செல்கிறோம். இந்தியாவின் மணி மகுடமாக இந்த மாநிலம் விளங்குகிறது என்றாா் அவா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...