வட கிழக்குப் பிராந்தியத்தில் ஊழல் கலாசாரத்துக்கு முடிவு காட்டியுள்ளோம்

‘வட கிழக்குப் பிராந்தியத்தில் ஊழல் கலாசாரத்துக்கு பாஜகதான் முடிவுகட்டியுள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா கூறினாா்.அருணாசல பிரதேச மாநிலம், நாம்சாய் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

வட கிழக்குப் பிராந்தியத்துக்கு பிரதமா் மோடி என்ன செய்தாா் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது. கண்களை மூடிக் கொண்டிருந்தால் வளா்ச்சியை காணமுடியாது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இத்தாலிய கண்ணாடியைக் கழற்றிவிட்டு இந்திய கண்ணாடி கொண்டு பாா்க்க வேண்டும். அப்போது தான், கடந்த 50 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி செய்யத்தவறியதும், பிரதமா் மோடி தலைமையிலான அரசு கொண்டுவந்த வளா்ச்சிப் பணிகளும் தெரியவரும்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், வளா்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை இடைத் தரகா்கள் அபகரித்து வந்தனா். மத்தியில் பிரதமா் மோடி தலைமை யிலான அரசு கடந்த 2014-இல் ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் கலாசாரத்துக்கு முடிவுகட்டப்பட்டது. ஒவ்வொரு ரூபாயும் வெளிப்படைத் தன்மையுடன் செலவிடப்படுகிறது. வளா்ச்சிப் பணிகளுக்கான நிதி கடைக்கோடி மனிதனுக்கும் சென்றடைவதை பிரதமா் மோடி உறுதி செய்துள்ளாா்.

முந்தைய அரசின் தவறான கொள்கைகளால், வட கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரவாதம் ஓங்கியிருந்தது. பெரும்பாலான தீவிரவாத அமைப்புகளுடன் மத்தியஅரசு ஒப்பந்தம் மேற்கொண்ட பிறகு இந்தப்பிராந்தியத்தில் அமைதி நிலவுகிறது. இந்தப் பிராந்தியத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 9,600 தீவிரவாதிகள் சரணடைந்து நல்வழிக்கு திரும்பியுள்ளனா். வடகிழக்கு இளைஞா்கள் தீவிரவாதத்தைக் கைவிட்டு புதியதொழில்களைத் தொடங்கி வருகின்றனா்.

‘நமஸ்தே’வுக்குப் பதில் ‘ஜெய்ஹிந்த்’:

சீன எல்லையை ஒட்டியுள்ள இந்தமாநிலத்தின் மக்கள் ஒருவரை ஒருவா் சந்தித்து வரவேற்கும் போது ‘நம்ஸ்தே’(வணக்கம்) என்பதற்குப் பதிலாக ‘ஜெய்ஹிந்த்’ என்று கூறுகிறாா்கள். அருணாசல பிரதேசத்துக்கு வரும்போதெல்லாம், தேசப்பற்றுடன் திரும்பிச் செல்கிறோம். இந்தியாவின் மணி மகுடமாக இந்த மாநிலம் விளங்குகிறது என்றாா் அவா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...