இந்தியாவின் செயல்திறனை கண்டு உலகம் பாராட்டுகிறது

இந்தியாவின் செயல்திறனை பார்த்து உலகநாடுகள் பாராட்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னௌவில் நடைபெற்றுவரும் உ.பி. முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 3.0 இல் பங்கேற்று ரூ.80 ஆயிரம்கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது: “மற்ற ஜி-20 நாடுகளைவிட வேகமாக வளர்ந்துவரும் நாடாக நாம் இருக்கிறோம். சீர்திருத்தம், செயல் திறன் மற்றும் மாற்றம் என்ற மந்திரத்தை நமதுஅரசு பின்பற்றி வருகிறது” எதிர்காலத்தை நோக்கமாக கொண்ட கொள்கைகள் இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது, “கடந்த எட்டு ஆண்டுகளில், டிஜிட்டல் புரட்சியை வலுப்படுத்த உழைத்துள்ளோம். கொள்கை ஸ்திரத்தன்மையை கொண்டு வந்துள்ளோம், தேவையற்ற சட்டங்களை நீக்கியுள்ளோம்.”.

பாஜகவின் இரட்டை இயந்திரஅரசாங்கம் மாநிலத்தின் வளர்ச்சியை துரிதப் படுத்தியுள்ளது, அடுத்த 25 ஆண்டுகள் ‘அமிர்த காலமாக’ இருக்கும்.

மத்திய அரசின் சீர்த்திருத்தங்கள் மூலம் இந்தியா ஒருவலுவான தேசமாக உருவெடுத்துள்ளது. “ஒரே நாடு; ஒரேவரி; ஒரே ரேஷன் கார்டு” உள்ளிட்டவை அரசின் உறுதியான, தெளிவான கொள்கையின் பிரதிபலிப்பாகும்.

உலகளாவிய சூழ்நிலைகள் புதியவாய்ப்புகளை கொண்டு வருவதாகவும், நம்மிடம் திறன்கள் இருப்பதால் உலகநாடுகளுக்கு இந்தியா நம்பகமான நண்பராக உருவெடுத் துள்ளதாகவும், இந்தியாவின் திறமை மற்றும் செயல்திறனை பார்த்து உலகநாடுகள் பாராட்டுவதாக மோடி கூறினார்.

மேலும்,ஏறக்குறைய 37 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, உத்தரப் பிரதேசத்தில் மக்கள் மீண்டும் ஒருஅரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர், இது யோகி அரசாங்கத்தின் செயல்திறன் குறித்துபேசப்படுவதாக உள்ளது.

கங்கை நதிக்கரையில் ஐந்து கிலோமீட்டர் தூரத்தை இயற்கை வேளாண்மைக்கான தாழ்வாரமாக உருவாக்க அரசு முடிவுசெய்துள்ளதாக பிரதமர் கூறினார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு உத்தரப்பிரதேசம் உத்வேகம் அளிக்கும், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களின் கனவுகளுக்கு சிறகுகொடுக்கும் திறன் உத்தரப்பிரதேச இளைஞர்களிடம் உள்ளது.”இளைஞர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தால் உங்கள்கனவுகள் நனவாகும்,” .

மேலும், முதலீட்டாளர்கள் விவசாயம் மற்றும் உணவுபதப்படுத்துதல் துறைகளில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்ட பிரதமர், தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு வருகைதருமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்புவிடுத்தார்.

“நீங்கள் காசிக்குச்சென்று, அதன் பாரம்பரியத்தை பாதுகாத்த நகரத்தின் புதிய தோற்றத்தைப் பார்க்கவேண்டும்” என்று மோடி கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

”உலகின் எந்த மூலையில் இருந்தா ...

”உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்” – பிரதமர் மோடி ''உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்'' என ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர் ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர்கள் கண்டனம் கவலை அளிக்கிறது! காஷ்மீரில் இருந்து வரும் செய்தி கவலை அளிக்கிறது. ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அ ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை; பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை சவுதி அரேபியாவில் இருந்து நேற்று டில்லி திரும்பிய பிரதமர் ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு & ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு – தாக்குதலுக்கு தயாராகிறது இந்தியா பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாக்., உறவை துண்டித்துக் ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவ ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவில் பதிலடி – ராஜ்நாத் சிங் ஜம்மு - -காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...