வாசனைத் திரவியங்கள்

 பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே வாசனைத் திரவியங்களை அளவோடும், பொருத்தமான இடங்களிலும் பயன்படுத்தினால் மருத்துவப் பயன் உள்ளது.

பசியைத் தூண்டும் குணம், செரிமானத்திற்கு உதவும் தன்மை, கிருமிகள் எதிர்ப்பு என இந்தப் பொருட்கள் உதவக் கூடியவை.

இந்த வகையில் பெருங்காயம், மிக முழுமையான தாது உப்புகள், கால்சியம், இரும்புச் சத்துக்களை கொண்டுள்ளது. உணவில் ஒரு துளி பெருங்காயம் சேர்த்தால் ஆஷ்துமா, நெஞ்சுச் சளி நோய், அஜீரணம், வயிற்றுவலி, வயிற்றில் பூச்சித் தொல்லை என்ற பல கோளாறுகளை இது போக்கும்.

சீரகமும் இதேபோலத்தான். இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம், வைட்டமின் 'ஏ' மற்றும் வைட்டமின் 'பி' அடங்கியுள்ளது. வயிற்றுக் கடுப்பு, வயிற்று போக்கு, கால ஒழுங்கற்ற மாதவிலக்குக் கோளாறு, இவற்றை நீக்குகிறது. செரிமானத்திற்கு உதவுகிறது. கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

மல்லி, செரிமானத்திற்கு உதவும் திரவியம். உடல் சூட்டை நன்கு தணிக்கிறது. காய்கறிகள் வேகவைக்கும்போது, பொரிக்கும்போது மஞ்சள் தூவுவது நமது நாட்டில் பழக்கம். இது உள் காயங்களை ஆற்றும். பிசகிய தசை வழிகளுக்கு நிவாரணி. கிருமி நாசினி. புற்றுநோயை எதிர்க்கிறது.

தேங்காய்ப்பாலில் மிக அதிக தாது உப்புகள் உள்ளன. நார்ச் சத்துடன் நல்ல மலமிளக்கியாகவும் உள்ளது.

குறுமிளகு செரிமானத்திற்கு ஏற்றது. பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கரோடின், மண்ணீரல் சிறுநீர்க் குழாய்களில் கிருமித் தொற்றைப் போக்கும். மனமும் நிறமும் உணவுக்கு கவர்ச்சித் தன்மையைத் தரும். 'ருமேட்டிசிசம்' நோய்களுக்கு நன்றாக குணமளிக்கும்.

இலவங்கப்பட்டையும் வாசனை, ருசிகூட்டும். செரிமானத்திற்கு உதவும். சளியை போக்கும். கிராம்பு பல்வலி தீர, வாய்ச்சுத்ததிற்கு, உணவு கெடாமல் பாதுகாக்க என்று பயன்படுகிறது.

 

இலவங்கப்பட்டை மூலம் சுக்கில நஷ்டத்தைப் போக்கலாம். ஆஷ்துமா நோயைக் குணப்படுத்தும் ஆற்றலையும் இது பெற்றுள்ளது. சிலந்தி விஷம், பாம்புகளின் விஷம் இவைகளை முறியடிக்கவும் இது நல்ல மருந்தாகிறது.

 

இலவங்கப்பட்டையை வறுத்து இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு வேளைக்குப் பத்து குன்றிமணி அளவு உட்கொண்டு வந்தால் மூளை, இருதயம் போன்ற உறுப்புகளுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். மேலும் உடல் நடுக்கம், கண் அடிக்கடித் துடித்தல் போன்றவை குணமாகும்.

 

பெண்களைப் பொறுத்தவரை மாதவிலக்குக் காலத்தில் தடைப்படுகின்ற உதிரத்தை விரைவில் வெளியேற்ற இந்தப் பட்டைத்தூள் பெரிதும் துணையாகிறது. வயிற்றில் கடுமையான வலி ஏற்படாமலும் பாதுகாத்துக் கொள்ளும் தன்மை கொண்டது.

 

இலவங்கப்பட்டையிலிருந்து தயாரிக்கும் சூரணத்தைப் பல்பொடியில் கலந்து பல் விளக்கி வந்தால் வாய் நாற்றம், பற்களின் கூச்சம் இவை குணமாகும். தாய்ப்பாலில் இதைக் கலந்து கண்களின் புருவத்தில் தடவி வந்தால் நல்ல பார்வையை உண்டு பண்ணும்.

 

வயிற்றிலுள்ள வாயுவைக் கண்டிக்கும் நல்ல மருந்தாகவும் இது திகழ்கிறது.

 

வாத சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. சன்னி, பைத்தியம் போன்ற நோய்களையும் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.

 

 

இஞ்சி உணவாகவும், மருந்தாகவும் முழுமையாச் செயல்படுகிறது. செரிமானம், ரத்த ஓட்டம் சீராக, வீக்கம் குறைய, வாயுத் தொல்லை விலக, புற்றுநோய் தடுக்க எனப் பலவழிகளில் உதவுகிறது.

 

பூண்டு குடல் புற்றுநோய், மூளைப்புற்று வராமல் தடுக்கிறது. மூளைப்புற்று அல்லது புற்றுக்கட்டிகளில் செல்கள் மேலும் பெருகாமல் தடுக்கிறது.

கடுகு எண்ணெய் தசைவலிகலைப் போக்கும். வயிற்றில் பூச்சிகளினால் கிருமித்தொற்று நேராமல் காக்கும். உணவில் நச்சுத் தன்மையைக் களைகிறது. உணவுப் பக்குவப் பராமரிப்பாகவும், பொலிவைக் கூட்டுவதாக உடலுக்கும் பயன்படுகிறது.

புதினா இலை பசியை நன்றாகத் தூண்டும். செரிமானத்துக்கு உதவும். மிக முக்கியமாக வலிப்பு நோயாளிகள் அதிகம் உண்ண வேண்டிய ஒன்று.

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு கசகசா நல்ல மருந்து. உணவுக்கு மணம் சுவை கூட்டும். வெப்பத் தாக்குதலினின்றும் காக்கக் கூடியது.

இதை அளவாக தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினால் மருத்துவப் பலன்களை முழுமையாகப் பெறலாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...