தமிழ்நாட்டையும் இரண்டாகப் பிரிக்கக்கோரி போராட்டம் நடைபெறலாம்

தேர்தலின் போது தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்பதற்காக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நெல்லைமாவட்ட பா.ஜ.க சார்பாக பாளையங்கோட்டை ஜோதிபுரம்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றக் குழுத்தலைவரான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு பேசினார் அவர் பேசும்போது, “தமிழகத்தில் மதுபோதைக்கு அடிமையாகக் கூடியவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருவது வருத்தம் அளிக்கிறது. வருங்காலத்தை நினைத்தால் இன்னும் அச்சம் அதிகமாகிறது.

தமிழகத்தில் மது மற்றும் கஞ்சாவிற்பனை அதிகரிக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட கஞ்சாவுக்கு அடிமையாகும் கொடுமைநடக்கிறது. அதனால் கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்த காவல் துறை துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லா விட்டால் குடிப்பழக்கத்துக்கு அடிமையான மாநிலமாக தமிழகம் மாறிவிடும்.

கஞ்சா போதை காரணமாக ஒரேமாதத்தில் ஏழு பேர் கொலையாகி இருக்கிறார்கள். ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் கமிஷன் பற்றியே முதல்வர் சிந்திக்கிறார். கடந்த ஓராண்டில் மட்டும் காண்டிராக்டர்களிடம் இருந்துமட்டும் 40,000 கோடி ரூபாய் கமிஷனாகப் பெற்றிருக்கிறார்கள்.

அ தி.மு.க-வின் முன்னாள் சபாநாயகராக இருந்த மறைந்த காளிமுத்து பேசும்போது, ’எப்போதும் ஆட்சிக்குவரும் கட்சி அ.தி.மு.க. ஆனால் எப்போதாவது ஆட்சிக்கு வரும் கட்சி தான் தி.மு.க’ என்பார். பல்வேறு காரணங்களால் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்துவிட்டது. கூட்டணி தர்மம் கருதி அதை நான் வெளியில் சொல்லமுடியாது. ஆனாலும், இரண்டு, மூன்று காரியங்களை எடப்பாடி பழனிசாமி சரி செய்திருந்தால் இன்றைக்கு அவர் முதல்வராக இருந்திருப்பார்.

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, ’தமிழ்நாடு தனி நாடாக வேண்டும்’ என்று பேசியிருக்கிறார். அவர் ஆசைப்படும்போது நாங்கள் கேட்கக் கூடாதா? அதனால் நாங்களும் தமிழ் நாட்டை ஆந்திரா போன்று இரண்டாக பிரிக்க வேண்டும் என்று கேட்போம். தலா 117 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு இரண்டு மாநிலங்கள் உருவாக்கப்பட்டால் இரண்டிலும் பாரதிய ஜனதா முதலமைச்சராக வரமுடியும்.

நிர்வாக வசதிக்காக பாண்டியநாடு, பல்லவ நாடு எனப் பிரிக்கலாம். தமிழ்நாட்டை பிரிக்க முடியாது என்று மட்டும் நினைக்க வேண்டாம். ஏனென்றால் நாங்கள் அதற்கான இடத்தில் இருக்கிறோம். பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.

அதனால் மாநிலத்தை இரண்டாகப்பிரிக்க முடியும். தெலங்கானா பிரிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆந்திராவில் நடைபெற்ற போராட்டம்போல, தமிழ்நாட்டையும் இரண்டாகப் பிரிக்கக்கோரி போராட்டம் நடைபெறலாம்” என்று நயினார் நாகேந்திரன் பேசினார். பின்னர், திமுக அரசைக்கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...