ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுதோறும் மூவர்ண தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும்

ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுதோறும் மூவர்ண தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் 75 ஆவது சுதந்திரநாள் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அந்தவகையில் 75 ஆவது சதந்திர நாளை கொண்டாடும் விதமாக அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் மத்தியஅரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துவருகிறது.

அதன்படி, ஹர் கர் ட்ரையாங்கா இயக்கத்தை வலுப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வீடுகளிலும் தேசியகொடியை ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுதந்திரநாளை கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் தேசியக்கொடியை பறக்கவிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தஆண்டும் நாம் அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்துவரும் நிலையில், அதை ஹர் ஹார் ட்ரையாங்கா(ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி) இயக்கம் மூலம் மேலும் வலுப்படுத்துவோம்.

ஆகஸ்ட் 13 முதல் 15 வரை நாட்டுமக்கள் ஊங்கள் வீடுகளில் மூவர்ண தேசியக் கொடியை பறக்கவிடுங்கள். இந்த இயக்கம் தேசியக்கொடியுடனான நமது இணைப்பை மேலும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இன்று, ஜூலை 22 நமது வரலாற்றில் ஒருசிறப்பான நாள். 1947 ஆம் ஆண்டு இதே நாளில்தான் நமது தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது. நமது மூவர்ணக்கொடி மற்றும் பண்டிட் நேருவால் ஏற்றப்பட்ட முதல் மூவர்ணக் கொடியுடன் தொடர்புடைய குழுவின் விவரங்கள் உள்பட வரலாற்றில் இருந்து சிலசுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...